ஹோம்பலே பிலிம்ஸ் மற்றும் க்ளீம் புரொடக்ஷன்ஸ் அனிமேஷன் தொடரான மஹாவதார் சினிமாடிக் யுனிவர்ஸிற்கான வரிசையை வெளியிடவுள்ளது. இந்தத் தொடர், விஷ்ணுவின் பத்து தெய்வீக அவதாரங்களை விவரிக்க உள்ளது இது 2025 இல் மஹாவதார் நரசிம்மருடன் தொடங்கி 2037 இல் மஹாவதார் கல்கி பகுதி 2 உடன் முடிவடையும்
இப்போது மகா அவதார் நரசிம்மா அனிமேஷன் படத்தின் விமர்சனம் பார்க்கலாம் வாங்க
நரசிம்மா ‘மனித-சிங்கம்’, நரசிம்ஹம் , சத்ய யுகத்தில் இந்து கடவுள் விஷ்ணுவின் நான்காவது அவதாரமாகும் . அவர் பகுதி-சிங்கமாகவும், பகுதி-மனிதனாகவும் அவதரித்து ஹிரண்யகசிபுவைக் கொன்றார், பூமியில் தேவர்கள் துன்புறுத்தல் மற்றும் பேரழிவை முடிவுக்குக் கொண்டுவந்தார் ,
பக்த பிரகலாதன் அன்புக்கு கட்டுப்பட்டு அந்த குழந்தையின் பக்திக்கு கட்டுண்டு கண் முன் தோன்றி
தர்மத்தை மீட்டெடுத்தார் .
அந்த கதையை தான் அனிமேஷன் முறையில் மிகச்சிறப்பாக உருவாக்கி கண்களுக்கு விருந்தாக்கி கருத்தோடு தந்திருக்கிறார்கள் மிகப்பெரிய வெற்றி பெறும் என்பது உறுதி
KGF, Kantara போன்ற படங்களின் மகத்தான வெற்றிக்குப் பிறகு, ஹோம்பலே பிலிம்ஸ், அஷ்வின் குமார் இயக்கத்தில்
வெளிவந்துள்ள இந்த படத்தில் பல ஆச்சரியத்தக்க காட்சிகளை கண்முன் காட்டுகிறார்கள்
விஷ்ணுவின் கடுமையான அவதாரத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு காட்சியான மகாவதர் நரசிம்ஹாவைக் கொண்டு வந்து
இதை உலகமெங்கும்
மகாவிஷ்ணுவின் புகழ் பாடும் இந்த அனிமேஷன் மிகப்பெரிய வெற்றியை பறைசாற்றும் என்பது உறுதி
கதை களம்
இந்து புராணங்களின் அற்புதமான கதைகளில் ஒன்றான அரக்க மன்னன் ஹிரணகஷ்யபுவை அழிக்க விஷ்ணு நரசிம்மராக அவதாரம் எடுத்ததை மையமாகக் கொண்ட ஒரு காட்சி ரீதியாக ஈர்க்கக்கூடிய அனிமேஷன் மறுபதிப்பாகும்.
இதுவரை எத்தனையோ படங்கள் பக்த பிரகலாதன் கதையைக் கேட்டிருக்கிறோம் பார்த்திருக்கிறோம் முற்றிலும் வித்தியாசமான
கண்கவர் காட்சிகள் மற்றும் கதைசொல்லல் ஆகியவற்றின் மூலம் இந்த தெய்வீக நீதி நம்பிக்கையின் ஒரு கதையை சொல்லப்பட்டுள்ளது.
ஒவ்வொரு காட்சிக்கும் மெனக்கெட்டு
வி .எஃப். எக்ஸ் மற்றும் சிஜி காட்சிகளை உருவாக்கி பிரமிக்க வைக்கிறார்கள். மலை அருவி, பிரகலாதன் கொல்லப்படுவதற்காக காட்டப்படும் கடல். மற்றும் நெருப்பு. ஆகாயம் .மலை உச்சியிலிருந்து தள்ளி விடுதல் இப்படி எல்லா காட்சிகளும் கண்கொள்ளா காட்சிகள்.
இது இந்திய அனிமேஷன் சினிமாவின் ஒரு முக்கிய சாதனையாகும்.
நரசிம்ம அவதாரம் எடுத்து மகாவிஷ்ணு கடைசி காட்சிகளில் துவம்சம் செய்யும் போது மெய் சிலிர்க்கிறது. ஆங்காரத்துடன் கர்ஜிக்கும் அந்த கடவுளும் மனிதனும் கலந்த அந்த நரசிம்ம அவதாரம் பத்து அவதாரங்களில் மிக முக்கியமானவை.
அஸ்வின் குமார் இயக்கிய இந்தப் படம், ஒரு கடவுளும் ஒரு அரக்கனும் ஒருவருக்கொருவர் போரில் ஈடுபடுவதைக் காட்டுகிறது. ஹிரணகஷ்யபு என்ற அரக்கன் தனது மகன் பிரஹ்லாதன் (விஷ்ணுவின் பக்தர்) செய்த ஒரு காரியத்திற்காக விஷ்ணுவை பழிவாங்க முயல்கிறான். அடுத்து, ஒரு அசாதாரணமான மற்றும் கரடுமுரடான சிங்கமாக நரசிம்மரை நாம் காண்கிறோம், அவர் பாதி மனிதனும் சிங்கமும் ஆவார். அவர் கோபம் மற்றும் கருணையின் இரட்டை வடிவத்தையும், பிரஹ்லாதனைக் காப்பாற்றவும், பிரஹ்லாதனுக்கு எதிரான ஹிரணகஷ்யபுவின் கொடூரமான செயல்களுக்குப் பிறகு சமநிலையை மீட்டெடுக்கவும் பூமிக்கு வந்த விஷ்ணுவின் பக்தியுள்ள அவதாரத்தையும் ரசிக்கிறார்.
மகாவதார நரசிம்மரின் மனதைக் கவரும் அனிமேஷன் மைய நிலையை எடுக்கிறது. படத்தில் உள்ள சிக்கலான கதாபாத்திர வடிவமைப்புகள் மற்றும் வண்ணத் தட்டுகள் புராணக் கதையை ஆதரிக்கவும் குறிப்பிடத்தக்க மற்றும் மறக்கமுடியாத காட்சிகளை உருவாக்குகின்றன. ஹோம்பலே பிலிம்ஸ் எதிர்பார்க்கும் விதமாக, படத்தில் பயன்படுத்தப்படும் அனிமேஷன் தொழில்நுட்பம் தெளிவாக A+ தரத்தில் உள்ளது, இது பார்வையாளர்களுக்கு முற்றிலும் அதிர்ச்சியூட்டும் மற்றும் கம்பீரமான அனுபவத்தை உருவாக்குகிறது
இந்திய டெக்னாலஜி உலகத் தரத்துக்கு உயர்ந்து நிற்கிறது இந்த படத்தின் மூலம் அவதார் போன்ற படங்களை இனி இந்தியாவிலேயே உருவாக்க முடியும் என்று இப்படத்தின் மூலம் இயக்குனர் விஷ்ணுகுமார் சொல்லி இருக்கிறார்
பிரமிக்கத்தக்க டெக்னாலஜியும் அதற்கேற்ற கதைக்களமும் கதாபாத்திரங்களுக்கு பொருந்தக்கூடிய டப்பிங் வாய்ஸ் எல்லாமே கலந்திருப்பதால் ஒரு மிகப்பெரிய வெற்றி பட்டியலில் இந்த அனிமேஷன் படம் இடம் பிடிக்கும்
இதை உருவாக்கிய அனைவருக்கும் நமது வாழ்த்துக்கள்
அனிமேஷன் தரம் மற்றும் காட்சி பிரம்மாண்டத்திற்காக பாராட்டப்படுகிறது.
நல்ல அனிமேஷன் திரைப்படங்களை இந்தியாவிலும் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை இது எழுகிறது
,அனிமேஷன் தரம் ஆச்சரியமாக இருக்கிறது” , ஒரு நல்ல அனிமேஷன் திரைப்படம்” காட்சி பிரம்மாண்டம் .
படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அனிமேஷன் தரம் மற்றும் கதை சொல்லும் விதம், இந்த திரைப்படம் இந்திய அனிமேஷன் துறையில் ஒரு திருப்புமுனையாக அமையும்
மக்கள் தொடர்பாளர் யுவராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்🌷🙏 படத்திற்கு உழைத்த தொழில்நுட்ப கலைஞர்கள்
Edited by Kleem Productions
Music – Sam CS
Sitar – Kishore
Guitars – Joseph Vijay
Flute – Nadhan
Violin – Balaji
Rhythm – Kalyan, Prithvi
Studio Engineers – CD Anbumani, Chidambara Kannan M, Murali Manohar A @Psalter Record Inn Pvt Ltd. Chennai
Mixed and Mastered: Abin Pushpakaran @ Blu academy
Mix Assistant: Sims Marichami
Production Manager – K Mahima Chowdhary
Production Management Team – Kannan, Indumathi K, Sathya Moorthy.
Music Co-ordinator – Velavan B
Tech Support: Parthiban @ The Pro Audio
பெருமை மிக்க தயாரிப்பாளர்கள்
: Presented By: Hombale Films
Directed By: Ashwin Kumar Produced By Shilpaa Dhawan
Produced By: Kushal Desai
Produced By: Chaitanya Desai
North India Distribution: AA Films
Co-Producers: S.C. Dhawan, Durga Baluja
Executive Producers: Shilpaa Dhawan, Samay Mahajan, Dhruva Karunakar, Shriya Torne
Associate Producer: Christian Carrillo, Richa Arora
: மொத்தத்தில் இந்த அனிமேஷன் திரைப்படம் இந்தியாவின் பெருமைமிக்க படைப்பாக வந்திருக்கிறது. அனைவரும் கண்டு களிக்கலாம். மகாவிஷ்ணுவின் அருளை பெறலாம். இந்திய தேசத்துக்கு வெற்றி வாகை தேடி தரும் இந்த படப்பை தந்த அத்தனை படைப்பாளிகளுக்கும் நன்றியும், வாழ்த்துக்களும் வணக்கங்களும்🌷🙏