ஜூலை 15, 2025
இரங்கல் அறிக்கை
ஜூலை 13, 2025 அன்று இயக்குனர் திரு. பா. ரஞ்சித் அவர்களின் ‘வேட்டுவம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த விபத்தில், தமிழ் சினிமாவில், சண்டைக்காட்சிகளில் தனக்கென ஒரு முக்கிய இடத்தை பெற்றிருந்த திரு.மோகன் ராஜ் மறைந்து விட்டார் என்ற செய்தி அனைவருக்கும் மிகவும் அதிர்ச்சி அளித்தது. பல திட்டமிடுதல்களுடன் நடந்த படப்பிடிப்பில் நடந்த இந்த கோர விபத்து மிகவும் கவலை தருகிறது.
திரு. மோகன் ராஜ் அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கிறோம். அவரின் குடும்பத்திற்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இரங்கலை தெரிவிக்கும் இந்த நேரத்தில், இது போன்ற விபத்துகள் இனி தமிழ் திரைப்பட தயாரிப்புகளில் நடக்காமல் இருக்க, தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், ஸ்டண்ட் மாஸ்டர்-களும், சண்டை கலைஞர்களும் மேலும் சிறப்பான முன்னேற்பாடுகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்.
பார்வையாளர்களை கவர நம் திரைப்படங்களில் உலக தரத்திற்கு ஹாலிவுட் போல சண்டைக்காட்சிகள் இடம்பெற முயற்சிப்பது அவசியம். அதே சமயம், ஹாலிவுட் படப்பிடிப்புகளில் செய்யப்படும் பாதுகாப்பு முன்னேற்பாடுகளையும் நம் படப்பிடிப்புகளில் செய்த பின் தான், சண்டை காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற வேண்டும். இன்னொமொரு கலைஞனின் உயிர் பலியாகாமல் தடுக்க, நாம் அனைவரும் இனிமேல் இதை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில்,
T.G. தியாகராஜன்
செயல் தலைவர்
T. சிவா
பொது செயலாளர்
