ஹனுமான் படத்தின் மூலம் 300கோடி வசூல் செய்த அறிமுக நாயகன் தேஜா நடிப்பில், கார்த்திக் இயக்கத்தில், மீண்டும் ஒரு மித்தாலஜி படமாக வெளிவந்துள்ள மிராய் இந்த படத்தின் விமர்சனம்.
அதிரவைக்கும் திரைக்கதையில் என மிரட்டி இருக்கிறார்கள் .
கி.மு 232-ல் கலிங்க போரில் அசோகர் தன்னால் நடந்த பேரழிவால் மனம் வருந்தி தன்னிடம் உள்ள சக்தியை 9 புத்தகங்களில் அடக்கி அதை 9 போர் வீரர்களிடம் ஒப்படைக்கிறார்.
எழுபத்து ஐந்து தலைமுறை கடந்து தற்போது அந்த புத்தகங்கள் ஒவ்வொன்றையும் அடைந்து உலகையே அழிக்க திட்டமிடுகிறார் (மனோஜ் மஞ்சு).
மாகவீர் ராமா.
இதை அறிந்துக்கொண்ட ஸ்ரேயா(அம்பிகா) இதை அழிக்க ஒரே வழி தன் மகனால் மட்டுமே முடியும் என தியானம் செய்து தெரிந்துக்கொள்கிறார்.
அதற்காக தன்னையே தியாகம் செய்ய துணிகிறார் அம்மா பாசம், இல்லாமல் தான் யார் என்றே தெரியாமல் மகனை அநாதையாக விட வேண்டும்,
இன்று அகஸ்திய முனிவர் சொல்ல அதன்படி நடக்கிறார்.
அந்த 9வது புத்தகத்தை வில்லன் அடைய வரும் போது தன் மகன் ராமரின் ஆயுதமான” மிராஜை அடைந்து வில்லனை அழிக்க வேண்டும் என்பதே விதி.
இதற்காக ஸ்ரேயா தன் மகனை அநாதையாக வாரணாசி-ல் விட்டு செல்கிறார். அதை தொடர்ந்து 24 வருடம் கழித்து ஹீரோயின் ரித்திகா(விபா), ஸ்ரேயா மகன் தேஜாவை தேடி வந்து உண்மையை புரிய வைக்கிறார் மகாவீர் ராமாவின் அடியாளாக யோகா வருகிறார்.
கல்கத்தாவில் வேதாவாக வளரும் தேஜா எப்படி விபாவின், துணையோடு தந்திரவனம் செல்கிறார்
அங்கு அகஸ்திய முனிவர் (ஜெயராம்)
சந்தித்து சம்பாதிப் பறவை ,அதை அனுகூலமாக்கி அந்த மிராயை’ எப்படி எடுக்கிறார்.
அதன் பிறகு தன் அம்மாவை எப்படி கண்டுபிடிக்கிறார் என்ன நடந்தது என்பதை பிரமாண்டமாக சொல்லி இருக்கிறது இந்த மிராய், அந்த 9வது புத்தகத்தை காப்பாற்றினாரா? என்ற பேண்டசி பயணமே இந்த மிராஜ்.
படம் முழுக்க பிரம்மாண்டம். பிரம்மாண்டம். அற்புதமான லொகேஷன்கள் .என அசத்துகிறது இந்த படம்.
நாயகன் தேஜா
தேஜா காதல் பாதையில் செல்லாமல் பேண்டஸி தான் வழி என்று ஹனுமான் படத்தில் நடித்தார். தற்போது மிராஜ் என தன் கதை தேர்விலேயே கலக்குகிறார், அவரும் தன் கதாபாத்திரத்தில் கலக்கியுள்ளார், கண்டிப்பாக தேஜா திரைப்பயணத்தில் இதுவும் ஒரு மைல் கல் படம் தான்.
சண்டைக் காட்சிகளில் அனல் தெரிக்கிறது.
அம்மாவை பார்க்கமுடிய வில்லை என்ற பரிதவிப்பு , விபாவை உயிராக நேசிப்பது ,மிராஜ் கையில் கிடைத்தவுடன் பறந்து பறந்து சண்டை போடுவது, என மிரட்டி இருக்கிறார்.
நாயகி ரித்திகா
நாயகி விபா” என்ற கேரக்டரில்,
பேஸ் ரீடிங், படித்து ஒவ்வொருவருடைய மைண்டை கண்ட்ரோல் செய்யும் கதாபாத்திரம், ஆரம்பத்தில் அவருக்கு வாய்ப்புகள் அற்புதமாக இருக்கிறது .போக போக நாயகன் ஆக்கிரமித்துக் கொள்வதால் அவருடைய போர்சன் குறைந்துவிட்டது இருந்தாலும்
ஹீரோயின் என்றால் ஏதோ ஹீரோவை காதலிக்க தான் என்றில்லாமல், தேஜாவின் சக்தியை அவருக்கு உணர்த்த அவரை தேடி அலைவது, அவருக்கு புரிய வைப்பது என ரித்திகாவிற்கும் நல்ல ரோல் தான்
அழகான தேவதை.
மனோஜ் மஞ்சு
மகாவீர் ராம் என்ற கதாபாத்திரத்தில் மிரட்டி இருக்கிறார் பிளாஸ்பேக் காட்சியில் தன்னை ஒதுக்கி வைத்த ஊரையே தீ வைத்து கொளுத்தும் குரூரம், தனக்கு மந்திரம் கற்றுத் தந்த குருவையே கட்டி போடும் அசகாய சூரனாக, பெரியார் சீடனாக கடவுள் இல்லை என்று நடித்திருக்கிறார்.
வில்லன் கதாபாத்திரத்தில் மனோஜ் மஞ்சு, 9 புத்தகங்களில் உள்ள சக்தியை அடைய வேண்டும், அதோடு உலகை ஆள வேண்டும் என்ற குறிக்கோள், அவர் உருவம் மிக பலசாலியாக இருந்தாலும்,
பார்வை குரூரமான அச்சத்தை தருகிறார்
கிளைமாக்ஸ் காட்சியில் நாயகன் மற்றும் இவரும் மோதும் சன்டை அனல் தெரிக்கிறது
வில்லன் கதாபாத்திரம் நிகல் காலத்தை விட சிறு வயதில் காட்டப்படும் ப்ளாஸ்பேக் மிரட்டுகிறது
படத்தின் முதல் பாதி மிராய்-யை தேஜா எப்படி அடைவார் என்ற தேடல் தொடங்க, இடைவேளையில் அந்த கருடன் சம்பாதியுடன், நடிக்கும் சண்டை பிரமாண்டத்தின் உச்சம், கண்டிப்பாக சிஜி டீம்க்கு பூங்கொத்து கொடுக்கலாம்.
இரண்டாம் பாதி மிராய்-யை
எப்படி தேடி வரும் வில்லனை அழித்து புத்தகத்தை தேஜா எப்படி காப்பாற்றுகிறார் என்பதே, அதற்கான பயணம் . கிளைமேக்ஸில் மித்தாலஜி பேக்டரை கொண்டு வந்த விதம் சிறப்பு. டெக்னிக்கலாக படம் மிக வலுவாக உள்ளது.
இயக்குனரே ஒளிப்பதிவாளர் என்பதால் பல மாநிலங்கள் பயனப்பட்டு,
பல லொகேஷன்கள் தேடி அலைந்து, படமாக்கி இருக்கிறார் ,
இதுவரை நாம் காணாத புதிய புதிய லொகேஷன்கள் கண்களுக்கு விருந்தாக இருக்கிறது. ஒளிப்பதிவாளருக்கு திருஷ்டி சுத்தி போடலாம் இயக்குனரும் ஒளிப்பதிவாளரும்
ஒன்று என்பதால் மெனக்கெட்டு படம் ஆக்கி இருக்கிறார். சிரமப்பட்டு இயக்கி இருக்கிறார்.
அழகாக காட்சிபடுத்தியுள்ளார்.
படத்தின் கதைக்களம், டெக்னிக்கல் ஒர்க், கிளைமேக்ஸ்,
மற்றும் தேஜா நடிப்பு நாயகியின் அழகு, ஜெகபதி பாபுவின் கம்பீரமான தோற்றம், ஸ்ரேயாவின் அழகுமிகு அம்மாவாக அற்புதமான நடிப்பு ,
வில்லனின் மிரட்டல், எல்லாமே சூப்பராக இருக்கிறது.
அடுத்தடுத்து எளிமையாக கணிக்க கூடிய திரைக்கதை.
எளிதாக உணரவைக்கிறது
நாம் அதோடு கனெக்டிகட் செய்ய முடிகிறது
பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார் இசை அமைப்பாளர்.
மித்தாலஜி பேக்டர் கலந்து டீசண்ட் பயனமாக்கியுள்ளனர்.
விஎஃப்எக்ஸ் (VFX) மற்றும் செட் டிசைன் , கம்ப்யூட்டர் கிராபிக்ஸ், பெரும் அளவிலான செட், மாபெரும் ஆக்ஷன் காட்சிகள் அனைத்தும் அழகாக காட்சியளிக்கின்றன
.
ரெயிலில் நடக்கும் ஆக்ஷன் சீக்வென்ஸ் சண்டை காட்சிகளும், சாகசங்களும் புல்லரிக்க வைக்கிறது.
தேஜா சஜ்ஜா
நடிப்பு நன்றாக இருக்கிறது. –
இயக்குநர் கார்த்திக் கட்டம்மநேனி மிகுந்த அம்பிஷன் உடன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
வாழ்த்துக்கள்
,ஒவ்வொரு காட்சியும், சவாலான முறையில் எடுக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில்
மிராய் – புது பாண்டஸி உலகுக்கு அழைத்துச் செல்லும் துணிச்சலான முயற்சி. மாபெரும் காட்சிகள், உணர்ச்சி பூர்வமான தாய்–மகன் பாசம், மற்றும் தேஜா சஜ்ஜாவின் நடிப்பு இப்படத்தை ரசிக்க வைக்கின்றன.
இந்திய படத்தின் தாக்கத்துடன் கூடிய சூப்பர் ஹீரோ சினிமாக்களை விரும்புவோருக்கு மிராய் கண்டிப்பாக
பிடிக்கும்.
மக்கள் தொடர்பாளர் யுவராஜ்
