கல்லூரியில் படிக்கும் நண்பர்கள் சிவா,(ஆர். ஜே. பி) செல்வம்,கனகு மூவரும் இணை பிரியாத நண்பர்கள் திவ்யா அந்த கல்லூரியில் புதிதாக சேருகிறார்.நண்பன் கனகுவுக்கும் பிரச்சனை ஏற்பட திவ்யாவை,சிவா, காப்பாற்ற அவனின் நல்ல மனம் கண்டு திவ்யா காதலிக்கிறார் ஜாதி வெறி பிடித்த திவ்யா அப்பா(அனந்த் ராம்) மகளின் காதலை ஏற்றாரா? இல்லையா?
தப்பு அடித்து பிணத்துக்கு முன் ஆடும் நாயகன் ஒருபுறம், அறங்காவலர் துறையில் வேலை செய்யும் அரசு அதிகாரியின் மகள் இந்த இரு துருவங்கள் எப்படி ஒன்றாக இணைந்து வாழ முடியும் என்று சொல்லும் படம்”திவ்யா”
இரண்டு மணி நேரம் மூன்று நிமிடம் ஓடக்கூடிய “திவ்யா திரைப்படத்தில், ஆணவக் கொலை பற்றி அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் .ஆர் .ஜே பி எத்தனையோ ஆணவக் கொலைகள் பற்றிய படங்கள் வந்திருந்தாலும் இந்த படம் ஒரு வித்தியாசமாகவும் எதார்த்தமாக இயல்பாக இருக்கிறது
நடிகர் &நடிகைகள்
நாயகன் – ஆர்.ஜே.பி
சிவா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் .இவர் நடிப்பு நன்றாக இருக்கிறது இயல்பாகவும், எதார்த்தமாகவும் சிறப்பாகவும் இருந்தது.
அம்மா, அப்பா இல்லாமல் தாத்தாவுக்கும் தன் தம்பிக்காகவும் வாழும் அவர் ,
திவ்யா தன் அம்மா போல் நினைத்து உருகி, அன்பை பொழிந்து காதலிக்க,
அவருக்கு தடையாக ஜாதி வெறி பிடித்த மனிதர்களால் அவர்கள் காதல் நிறைவேறாமல் கிளைமாக்ஸ் காட்சியில் ,கண்ணீர் விட்டு கதறும் பொழுது மனதில் இடம் பிடிக்கிறார் இயக்கம், நடிப்பு நன்றாக இருந்தது வாழ்த்துக்கள் ஆர் ஜே பி சார்!!!
-கேத்தி நாயகியாக நடித்திருக்கிறார்
கிராமத்து கல்லூரி மாணவி வேடத்தில் சிறப்பாக நடித்தி ருக்கிறார் முதல் பாதி அமைதியான அப்பா, அம்மாவுக்கு அன்புக்கு கட்டுப்பட்டவராக இரண்டாம் பாதியில் காதலனுக்காக எதையும் செய்ய துணியும் கதாபாத்திரத்தில் நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார்
கிளைமாக்ஸ் காட்சியில், காதலியின் சின்னமாக காதலன் தந்த அந்த கருப்பு கயிறை கையில் பிடித்துக் கொண்டு இறந்து கிடக்கும் காட்சி ,கல் மனதையும் கரைய வைக்கும்.
கேத்தி தமிழ் சினிமாவுக்கு கிடைத்த சிறப்பான ஒரு நேர்த்தி !!
செந்தில் வில்லன் வேடத்தில் மிரட்டி இருக்கிறார் ஜாதி வெறி கொண்டு அலையும் கதாபாத்திரம் கச்சிதமாக பொருந்துகிறது அவருக்கு!!!!
பவுன்ராஜ் நாயகன் தாத்தாவாக நடித்திருக்கிறார் கிளைமாக்ஸ் காட்சியில் பிச்சைக்கார பிழைப்புடா ,என்று அவர் பாடல் பாடி பேரனுக்கு முன்னால் உருகி நடித்திருக்கும் அந்த காட்சி கல் மனதையும் உருக வைக்கிறது. சிறப்பான நடிப்பு!!
அனந்த் ராம் நாயகியின் அப்பாவாக அறங்காவல் துறையில் பணிபுரியும் அரசு அதிகாரியாக நன்றாக நடித்தி ருக்கிறார்.
கோயில் திருவிழாவுக்கு
தன் பெயரை கீழே போட்டதற்காக குதிக்கும் அவர் சாக்கடையில் பன்னீர் விழுந்தாலும் அது நாத்தம் தான் என்று சொல்லும் உவமை சிந்திக்க வைக்கிறது. இப்படியும் கிராமத்தில் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று கொதிக்கவும் வைக்கிறது!!!
கலாவதி; நாயகியின் அம்மா சந்திரா ,என்ற கதாபாத்திரத்தில் மகள் செய்துவிட்ட அந்த காதலுக்கு நடிப்பில் காட்டியிருக்கிறார் மணமகன் வீட்டார் வந்து இருக்கும்பொழுது தன் பெண் ஓடி விட்டாலே!! என்று கத்தி கதறும் பொழுது ,இயல்பான ஒரு தாயை பார்க்க முடிந்தது!!
நாயகன் சிவாவின் நண்பர்களாக வரும் சபி,ஜிவி இருவரும் கனகு, செல்வம் என்ற கதாபாத்திரத்தில் முதல் பாதியில் கலகலப்பாகவும், இரண்டாம் பாதியில் காதலுக்கு உதவுவம் நல்ல நண்பர்களாக நடித்திருக்கிறார்கள் இவர்கள் வரும் காட்சி மிகவும் எதார்த்தமாக இயல்பாக இருந்தது.
தொழில்நுட்ப குழு
தயாரிப்பு: RJP Media
தயாரிப்பாளர்: கலாரவி
இன்றைய காலகட்டத்திற்கு தேவையான ஒரு நல்ல கதையை தேர்வு செய்து படமாக எடுத்திருக்கிறார்கள் வாழ்த்துக்கள்!!!
இந்த படத்திற்கு கதை, வசனம், எழுதி தயாரித்து இயக்கி இருக்கிறார்:( RJP)
சிவா என்ற கதாபாத்திரத்திற்கு நடிப்பில் மெருகூட்டி இயக்கத்தில் தெளிவான திரைக்கதை, அமைப்பு டன்படத்தை கொடுத்திருக்கிறார்.
எந்த ஒரு காட்சியும் லாஜிக் மீறல் இல்லாமல் படமாக்கப்பட்டு இருப்பது சிறப்பாகும்.
திவ்யா காதலை சொன்னவுடன் நாயகன் காதலை ஏற்க மறுப்பதும் பிறகு அவளின் நல்ல உள்ளம் கண்டு நாயகன் விரும்புவதும் எதார்த்தமாக இருந்தது.
படத்தின் வெற்றிக்கு திரைக்கதை, சீராக இருந்தது ஒரு காரணம் .எந்த இடத்திலும் படம் லேக்காகவில்லை எந்த காட்சிகளும் இந்த படத்திற்கு தேவையா ?என்று கேட்க வைக்கவில்லை !!
இயக்குனருக்கு வாழ்த்துக்கள்!!
சங்கர் ராம் இசையில் “எங்கே போற “என்ற பாடல் “பிச்சைக்கார பிழைப்புடா” என்ற பாடலும் “விழியில் விழுந்தது “என்ற பாடல் ரசிக்க வைக்கிறது பின்னணி இசை அருமை!!
செல்வகுமார் அவர்களின் ஒளிப்பதிவு கிராமத்து அழகை அள்ளி வந்திருக்கிறது கல்லூரியை காட்டும் பொழுதும் பாடல் காட்சியில் ஒளிப்பதிவாளர் திறமை மற்றும் எல்லா இடங்களிலும் ஒளிப்பதிவாளர் சிறப்பாக பணிபுரிந்து இருக்கிறார்!!!
வளர்பாண்டி, இந்த படத்துக்கு படத்தொகுப்பாளராக பணி புரிந்திருக்கிறார் இரண்டு மணி நேரம் மூன்று நிமிடம்
படம் கச்சிதமாக இருக்கிறது!!
கவிகண்ணண் பாடல்களை எழுதியுள்ளார் பாடல் வரிகள் ரசிக்க வைக்கிறது!!!
படத்தின் வெற்றிக்கு நிறைய கலைஞர்கள் உழைத்திருக்கிறார்கள் அவர்கள் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும்
ஒப்பனையாளர், மற்றும் ஆடை வடிவமைப்பாளர்,
கலர் கரெக்ஷன் செய்தவர்கள்,
டி.ஐ செய்தவர்கள்,
சவுண்ட் மிக்ஸிங்,
செய்தவர்கள் என அனைவரும் படத்திற்காக சிறந்த உழைப்பை கொடுத்து இருக்கிறார்கள் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
போஸ்ட் விளம்பர வடிவமைப்பு: வினோத்
மக்கள் தொடர்பாளர் சரண் ,இந்த படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்து இருக்கிறார் அவருக்கும் வாழ்த்துக்கள்
மொத்தத்தில் இந்த படம் வெற்றி பட்டியலில் இடம் பிடிக்கும் வாழ்த்துக்கள் கிளாசிக் சினிமா 🌷
