🔥Producers : Dr Ishari K Ganesh & Vishnu Vishal
Co- Producers : Shubhra, Aryan Ramesh & Ishan Saksena
Executive Producer : Seetharam
Creative Producer : Shravanthi Sainath
Marketing and Promotions : Siddarth Srinivas
Executive Producer : Seetharam
கதை களம்
🔥கட்டா குஸ்தி 2″ ஒரு குடும்ப-உறவு பொழுதுபோக்கு படம் – இது முழுக்க முழுக்க விளையாட்டு படம் அல்ல; உறவுகள், நகைச்சுவை, உணர்ச்சி ஆகியவற்றின் கலவையாக
வந்துள்ளது.
முதல் பாகத்தின் முடிவில் ஒன்றாக வாழத் தொடங்கிய வீரா, மற்றும் கீர்த்தி ஆகியோரின் திருமண வாழ்க்கையே இரண்டாம் பாகத்தின் மையக்கதை
மல்யுத்தப் போட்டிகள் முடிந்தாலும், குடும்ப வாழ்க்கையில் புதிய சவால்கள், தவறான புரிதல்கள், நகைச்சுவையான சம்பவங்கள், உணர்ச்சிப்பூர்வமான தருணங்கள் என கதை நகரும்.
முதல் பாகத்தைப் போலவே குடும்ப நகைச்சுவை மற்றும் உணர்ச்சி கலந்த விளையாட்டு பின்னணியில் உருவாகியுள்ளது.
இது முதல் பாகத்தின் நேரடி தொடர்ச்சி.
முதல் பாகத்தில் இருந்த பல நடிகர்கள் மீண்டும் நடித்துள்ளனர்.
புதிய கதாபாத்திரங்களாக ரம்யா கிருஷ்ணன், மற்றும் யோகி பாபு இணைந்துள்ளனர்.
படத்தின் கிளைமாக்ஸ்
மிகப்பெரிய பலம்
.
🔥அப்படி போடு” பாடல் வரும் காட்சிகளில் தியேட்டர்களில் அவ்வளவு குதூகலம் ரசிகர்கள் அப்படி ரசிக்கிறார்கள்.
🔥அதேபோல கருணாஸ் பேசும் ஆணாதிக்க வசனங்களில், அவர் மனைவி பஞ்சாயத்து தலைவராக நிமிர்ந்து நிற்கும் பொழுது ,அப்படி ரசிக்கிறார்கள்.
கிளைமாக்ஸ் காட்சியில் யோகி பாபு வரும் ஒரு காட்சி படத்தின் உச்சகட்ட நகைச்சுவையாகும்.
🔥ரம்யா கிருஷ்ணன் வரும், கோர்ட் சீன் அவ்வளவு கலகலப்பாகவும் ரசிக்கும்படியாக இருக்கிறது.
🔥மதியின், கிளாஸ் டீச்சர் மீனுடீச்சர் வரும் காட்சிகளில் எல்லாம் “முந்தானை முடிச்சு” தீபாவை, ஞாபகப்படுத்துகிறார் ,அவ்வளவு ரம்யமாக இருக்கிறார்.நல்ல தேர்வு.
🔥ஐஸ்வர்ய லட்சுமியின் ,அந்த குஸ்திசண்டை பெண்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தி பெண்கள்
இது நமக்கான படம் என்று கொண்டாட வைக்கிறது.
🔥 குழந்தை மதி மலர் நடிப்பு,நடனம்.
சூப்பர் . படத்தின் வெற்றிக்கு வித்தாக அமைந்திருக்கிறது அந்த குழந்தை.
🔥 விஷ்ணு விஷால் சமையல் புரோகிராம் பெண்களை கவரும் சிறப்பான அம்சம்.
இப்படி பார்த்து பார்த்து கதை, திரை கதை எழுதி சொல்லி அடித்து கில்லியாக வெற்றி இலக்கை, தொட்டு இருக்கிறார் இயக்குனர் வாழ்த்துக்கள் சார்.
ஆணாதிக்க மனப்பான்மையையும், பெண்களின் திறமையையும் நகைச்சுவையுடன் சொல்ல வேண்டும் என்பதே இயக்குநரின் நோக்கம்.
அதில் வெற்றி பெற்று இருக்கிறார்.
🔥வீரா ஹவுஸ்ஹஸ்பண்டாகவும் ,கீர்த்தி ரயில்வேயில் ஒரு நல்ல அரசாங்க வேலையில் இருப்பதை போலவும் , இவர்களின் மகள் மதிமலரை வீரா பார்த்துக் கொள்வது என கதை நம்பக தன்மையுடன் நகர்கிறது.
மலரை,பள்ளிக்கு அழைத்துச் செல்ல அங்கே மீனு டீச்சர்
கவர்ச்சிகரமான
டீச்சராக,
கலக்கலான டீச்சர் கதாபாத்திரம் படம் முழுக்க பரவசபடுத்துகிறார்.
🔥மீனு டீச்சரை, வீரா எங்கே பிக்கப் செய்துவிடுவாரோ? என்று கீர்த்தி சந்தேகப்படுவது!! கலகலப்பான திரைக்கதை.
🔥கீர்த்தியின் மீது பொறாமை கொள்ளும் கோச்,
கீர்த்தியின் வெற்றியை தடுக்க முயல்வதும், அதற்காக பல சதி வேலைகளை செய்வதும், வீராமூலம் போதை மருந்து இரவில் கலந்து கொடுக்க வைப்பது , இதனால் வீராவுக்கும் கீர்த்திக்கும் ஏற்படும் பிரச்சனைகள், இவர்களது மகள் மலர், யார் பக்கம் போவார் ?என்ற எதிர்பார்ப்பும், கிளைமாக்ஸில் வீராவும், கீர்த்தியும் சண்டை போட்டு யார் வெற்றி பெறுவார்கள்? குடும்பம் இணையுமா? என்பது திரைக்கதை மாயாஜால வித்தை
வெற்றிக்கான அத்தனை அம்சங்களும் உள்ளன.
🔥இப்படம்வெறும் இரண்டாம் பாகம் இல்லை – முதல் பாகத்தின் வெற்றியை மட்டும் மீண்டும் செய்யாமல், குடும்ப உறவுகளையும் கணவன்-மனைவி வாழ்க்கையின் அடுத்த கட்டத்தையும் மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டு இருப்பது சிறப்பு.
மல்யுத்தம் கதையின் ஒரு பகுதி மட்டுமே – முதல் பாகத்தை விட இந்த முறை உறவுகள், நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.புத்திசாலிதனம்.
🔥பெண்களின் வலிமையை மையமாகக் கொண்ட கதைக்களம்
நிறைய வந்திருந்தாலும் இந்த படம் தனி கவனம் பெறுகிறது.
🔥வழக்கமான ஹீரோ கதையாக இல்லாமல், பெண் கதாபாத்திரத்திற்கும் சம முக்கியத்துவம் இருந்தது
கதையில் எந்த சமரசமும் செய்யாமல் எடுத்து ள்ளார் . இயக்குனர்.
இது இயக்குனர் கே பாலச்சந்தரின் பாணி.
🔥கிராமத்து சூழலை உண்மையாக காட்டுவதற்காக படக்குழு உண்மையான இடங்களில் படப்பிடிப்பு நடத்தி யிருக்கிறார்கள்.அது பார்வையாளர்களை
பரவச படுத்தி இருக்கிறது.
🔥விஷ்ணு விஷாலின் கதாபாத்திரத்தில் மீண்டும் மல்யுத்த களத்திற்குள் வருவதற்கு வலுவான காரணம் கதையில் இருப்பதாக இயக்குநர் காட்டியுள்ளார்.
முதல் பாகத்தின் நகைச்சுவை உணர்வு தொடரும் – அதே நேரத்தில் கதை இன்னும் பெரிய அளவில் நகரும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
🔥வீரா கதாபாத்திரத்தில்
விஷ்ணு விஷால்
நாயகனாக
நடித்திருக்கிறார்.
படம் முழுக்க மகளுக்கு நல்ல அப்பாவாக, மனைவிக்கு அன்பான கணவனாக, சூதுவாது தெரியாத ஒரு இன்னசென்ட் கேரக்டராக கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில், மகளுக்காக வெற்றி பெற்றே ஆக வேண்டும் !என்று மனைவிக்கு முத்தம் கொடுத்துக் கொண்டே அவரை வீழ்த்தும் காட்சிகளில் அவ்வளவு கரகோஷம் தியேட்டரில்,
விஷ்ணு விஷால் பல காட்சிகளில் இயல்பான முகபாவனைகளையும் ,நகைச்சுவை டைமிங்கையும்
சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
🔥கதாநாயகி ஐஸ்வர்யா லக்ஷ்மி மல்யுத்த வீராங்கனையாக இயல்பாகத் தோன்றுவதற்காக உடற்பயிற்சி மற்றும் மல்யுத்த அசைவுகளில் பயிற்சி பெற்று
நடித்திருக்கிறார் என்பது படம் பார்ப்பவர்களுக்கு அவர்களின் கதாபாத்திரம் ஒன்றைச் செய்கிறது.
கதாநாயகியாக ஐஸ்வர்யா லட்சுமியை தேர்வு செய்தது முக்கிய பலம் என்பதை இரண்டாம் முறையும் சொல்லி அடித்திருக்கிறார்.
அவரின் இயல்பான நடிப்பு, இந்தக் கதைக்கு சரியாக பொருந்தும்.
படத்தில் வரும் மல்யுத்தக் காட்சிகள் நம்பகமாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர் பயிற்சி எடுத்து, நடித்திருக்கிறார்.
இந்த படம் பெண்களை உயர்த்தி, ஆண்களை தாழ்த்தும் படம் அல்ல; குடும்பத்தில் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதன் அவசியத்தை சொல்லும் படம் ..
நகைச்சுவையுடன் சமூகக் கருத்தை சொல்லும் படம்
கீர்த்தி என்ற கதாபாத்திரத்தில் மூலம் பேசப்பட்டிருக்கிறது. –
🔥 மற்றும், ரம்யா கிருஷ்ணன்,
யோகி பாபு ,
கருணாஸ் ,
காளி வெங்கட் ,
கருணாகரன் ,
வரும் காட்சிகளில் காமெடியும், கலகலப்பும் றெக்கை கட்டி பறக்கிறது. கதைக்கு பலமாகவும் இவர்கள் நடிப்பு விளங்கி இருக்கிறது.
லாரா,
கருணாஸ் மனைவியாக, பிஏ படித்த தன்னம்பிக்கை பெண்ணாக, அவர் ஆங்கிலம் பேசும் பொழுது வியந்து போவது கருணாஸ் மட்டுமல்ல !!படம் பார்ப்பவர்களும் தான்.
என அனைவரின்,
நடிப்பு சிறப்பாக இருக்கிறது.
🔥செல்லா ஐய்யாவு
கதை ,வசனம் ,எழுதி இயக்கி இருக்கிறார்.
குறிப்பாக அந்த இன்டர்வெல் பிளாக்கும், அதன் பிறகு வரும் காட்சிகளும், விஷ்ணு விஷால், ஆக்ஷன், காமெடி
அவரின் கதாபாத்திரத்தை சிறப்பாக வடிவமைத்திருக்கிறார் இயக்குனர்.
ஆனால், கீர்த்தியாக வரும் ஐஸ்வர்யா லெட்சுமி கதாபாத்திரம் விஷ்ணு விஷாலை ஓவர்டேக் செய்து அதகளம் செய்திருக்கிறது. குஸ்தி போடுவது, தன்னுடைய கனவை நோக்கி ஓடுவது, அது தகரும்போது உடைவது, பொய்களை மறைக்கப் போடும் நாடகங்களில் நடக்கும் காமெடி, இடைவேளையில் எடுக்கும் ஆக்ஷன் அவதாரம் எனப் படம் முழுவதுமே, ஐஸ்வர்யா லெட்சுமியின் ஆட்டம்தான்.
முதல் பாதியில், வீராவின் மாமாவாக வரும் கருணாஸும், நண்பராக வரும் காளி வெங்கட்டும் காமெடியில் சிரிக்க வைக்க ,
என்றாலும் கதையை நகர்த்த உதவியிருக்கிறார்கள். கணவன் – மனைவி உறவு குறித்து, இருவரும் விவரிக்கும் காட்சிகளும், அதற்கு கவுன்ட்டராக பெண்கள் அடிக்கும் பதில்களும் காமெடி குஸ்தி. ஐஸ்வர்யா லெட்சுமியின் சித்தப்பாவாக வரும் முனீஸ்காந்த் என ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் உணர்ந்து எல்லாருக்கும் முக்கிய பங்கு வகிப்பது போல இயக்குனர் வடிவமைத்தது
படத்தின் வெற்றிக்கு உதவி இருக்கிறது.
காமெடியில் மட்டுமல்ல, உருக்கமான காட்சிகளிலும் ஸ்கோர் செய்திருக்கிறார்கள். இந்த கதாபாத்திரங்கள்.
இயக்குனர் மூன்றாவது பாகம் எடுப்பதற்கு இந்த இரண்டாவது பாகம் மிகப்பெரிய வெற்றியாக அமையும் இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.
🔥ஐஸ்வர்யா லெட்சுமியின் அப்பாவாக வரும் கஜராஜ், அம்மாவாக வரும் ஶ்ரீஜா ரவி ‘நல்ல’ கதாபாத்திரங்களாகவே வந்துபோகிறார்கள். அதிலும் ஸ்ரீஜா ரவி, பெண் எப்படியிருக்க வேண்டும் என்று பேசும் அட்வைஸ்
இந்தப் படத்திலும் தொடர்கிறது.
சில காட்சிகளே வந்தாலும், கருணாஸின் மனைவியாக வரும் கதாபாத்திரம் மனதில் நிற்கும்படியாக இருக்கிறது.இவர் பேசும் வசனம் பலமான கைதட்டல் பெறுகிறது
. ஆணும் பெண்ணும் சமம்தான் எனப் படம் சொல்ல வந்தாலும், க்ளைமாக்ஸில் கதாநாயகி கதாநாயகனை வெல்லும் தருணத்தைத் தவிர்த்தது ஏன்? என்ற கேள்வி எட்டிப் பார்க்கவே செய்கிறது. , அதுவரை பேசிய பெண்ணிய விஷயங்களை உடைத்து, இது ஒரு ஆண் மைய சினிமா என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
அதே
பெண் உரிமை, பெண்ணியம் குறித்தான ஓர் உரையாடலை ஒரு கமெர்ஷியல் சினிமாவில் புகுத்தியது ஆரோக்கியமான விஷயம்.
கணவன் – மனைவி சண்டையை மட்டும் கவனத்தில் கொள்ளும் அந்த க்ளைமாக்ஸ் பலம்! “இங்கு ஒரு பெண் விளையாட்டில் சாதிக்க, முதலில் அவள் குடும்பத்தை வென்றாக வேண்டும்” என்பது போன்ற வசனங்கள் சூப்பர்.
கேரள நிலப்பகுதி, பொள்ளாச்சி நிலப்பகுதி, குஸ்தி ஆடுகளம் என ஒளிப்பதிவாளர் பாஸ்கர் கேமரா படத்திற்கு அழகைச் சேர்த்திருக்கிறது. ஷேன் ரோல்டன் ஐந்து பாடல்களும் தொந்தரவு இல்லாமல் வந்துபோகிறது என்றாலும், ‘என் மகளே” பாடல் தனித்துத் தெரிகிறது. பின்னணி இசையிலும் ஸ்கோர் செய்கிறார்.
பரத் விக்ரமன் படத்தொகுப்பு ஆக்ஷன் காட்சிகளில் விறுவிறுப்பைக் கூட்டியிருக்கிறது.
🔥ஜெயச்சந்திரன் ஆர்ட்டைரக்டராக
பணி புரிந்து இருக்கிறார். அரங்க அமைப்புகள், விஷ்ணு விஷால் வீடு, சமையல் புரோகிராம், சண்டை நடக்கும் இடம் என எல்லா இடங்களிலும் ஆர்ட் டைரக்டர் பணி அற்புதமாக இருக்கிறது.
ருசி மோகன் காஸ்டியூம் டிசைனராக
சிறப்பாக பணிபுரிந்து இருக்கிறார்.
🔥படத்தில் ஒப்பனையாளர், சண்டை பயிற்சியாளர் ,நடன பயிற்சியாளர், என ஒவ்வொருவரும் தங்கள் பங்குக்கு கடுமையாக உழைத்திருக்கிறார்கள் படத்தின் வெற்றி அவர்களுக்கெல்லாம் புகழ் மாலை சூட்டத் தயாராக இருக்கிறது.
அந்த குழந்தைக்கு திருஷ்டி சுற்றி போட வேண்டும்.
அவ்வளவு அற்புதமான நடிப்பு
சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது. அந்த குழந்தைக்கு கிடைக்கும்.வாழ்த்துக்கள் பேபி.
🔥மக்கள் தொடர்பாளர்கள் சதீஷ் & சிவா(AIM)
நல்ல முறையில் மக்களிடம் கொண்டு போய் சேர்த்து இருக்கிறார்கள் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
