சினிமா ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட் நடிகர் ராமராஜன் நடிப்பில் உருவாகி உள்ள சாமானியன் . படம் எப்படி இருக்கு வாங்க பார்க்கலாம்
63 வயதிலும் ஆக்ஷனில் அவதாரம் எடுத்து உள்ளார் ராமராஜன்.
சாமானிய மக்களிடம் வங்கிகள் திருட்டுத்தனமாக எப்படி கொள்ளையடிக்கிறதுஎன்பதை ராமராஜன் போராளியாக மாறி மக்களுக்குஎச்சரிக்கை விடுக்கும் படம் தான் சாமானியன்
ராமராஜனின் இந்த மிஷன் இம்பாசிபிலுக்கு துணையாக ராதா ரவி மற்றும் எம்.எஸ். பாஸ்கர் நடித்துள்ளனர். இவர்களுக்கு உறுதுணையாக காவல்துறை அதிகாரியாக இ கே.எஸ். ரவிகுமார் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் 90 காலகட்டங்களில் கிராமத்து படம் என்றாலே ரசிகர்களின் நினைவுக்கு வருபவர் ராமராஜன்தான். அந்த அளவு அவர் நடித்த படங்கள் வெற்றி பெற்றுள்ளன. ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’, ‘எங்க ஊரு காவல்காரன்’, ‘என்ன பெத்த ராசா’, ‘கரகாட்டக்காரன்’, ‘பாட்டுக்கு நான் அடிமை’ போன்ற படங்கள் இன்றுவரை ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்டு வருகின்றன.
ராமராஜன் கடைசியாக 2012-ம் ஆண்டு ‘மேதை’ என்ற படத்தில் நடித்திருந்தார்
தற்போது ராகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சாமானியன்’ படத்தின் மூலம் சினிமாவில் தனது 2-வது இன்னிங்ஸை தொடங்குகிறார். இது ராமராஜனுக்கு 45-வது படமாகும்.
இந்தப் படத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி நல்ல கதையாக தேர்வு செய்து பண்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அவரின் தீர்க்கமான பார்வை, பேசும் வசனங்கள், மகள் திவ்யாவிடம் காட்டும் பாசம், வங்கியில் நடக்கும் போராட்டம் இப்படி எல்லா இடங்களிலும் அமைதியாக வந்து ஆர்ப்பாட்டம் இல்லாமல் அற்புதமான நடிப்பை வழங்கி இருக்கிறார் மற்றவர்கள் அவரை தலைவர் என்று சொல்லும் பொழுது இல்லை நான் சாமானியன் என்று அவர் தன்னைத்தானே பணிவாக சொல்வது அவருக்கு ஏற்ற வசனமாக அமைந்திருக்கிறது அவ்வப்போது படத்தில் இசைஞானியின் பாடல்களோடு ஒன்றிப் போய் விடுகிறார் அவருக்கு ஜோடி இல்லை என்றாலும் அந்த குறை தெரியாத அளவுக்கு எம் எஸ் பாஸ்கர், ராதாரவியும் உடனிருந்து அவருக்கு உதவுகிறார்கள் .
இந்த படத்தில் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், வெங்கட், மைம் கோபி, லியோ சிவகுமார், கே.எஸ்.ரவிக்குமார், சரவணன், தீபா சங்கர், ஸ்ம்ருதி வெங்கட், அறந்தாங்கி நிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்
ராஜா சார் இசையில் தத்தி தத்தி என்ற பாடல் ரசிக்க வைக்கிறது அவரது குரலில் இனிக்கிறது
மற்றும் அவ்வப்போது அவர் இசையில் வெற்றிகரமாக சூப்பர் ஹிட் அடித்த பாடல்களான, செண்பகமே செண்பகமே, சொர்க்கமே என்றாலும், போன்ற பாடல்களை ஒலிக்க விட்டு நம்மை பரவசப்படுத்துகிறார் பின்னணி செய்யும் அற்புதமாக இருக்கிறது
சாமானியன் படத்தின் கதை என்ன வாங்க பார்க்கலாம்!
ராமராஜனின் மகள் திவ்யா சிவில் இன்ஜினியரிங் படித்து விட்டு, அந்த வேலை கிடைக்கும் வரை ஐ டி கம்பெனி யில் வேலை க்கு சேருகிறார் .
அவருக்கு வேலை வாங்கி தந்த எம்எஸ் பாஸ்கர் மகன் லியோ சிவகுமார் ,அவரை திருமணம் செய்து கொள்கிறார்
நன்றாக போகும் அவர்கள் வாழ்க்கையில் ஒரு தேவையற்ற சம்பவம் நடந்து பொருளாதார சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள்
பேங்கில் லோன் வாங்கி கட்ட முடியாமல் பேங்க் ஊழியர்கள் மற்றும் கடன் வசூல் செய்யும் முல்லை யால், இம்சிக்கபட்ட தொந்தரவால் அவமானம் தாங்க முடியாமல் கணவன் மனைவி குழந்தையுடன் , எந்த வங்கியில் கடன் வாங்கினார்களோ எந்த வங்கி அவரை டார்ச்சர் செய்ததோ, அதே வங்கியில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
ராமராஜன் தன் மகளுக்காக, அவருடைய நண்பர்களின் உதவியுடன் தன் மகளின் குடும்மம் தற்கொலைக்கு காரணமான பேங்க் ஊழியர்கள் மற்றும் அதற்கு காரணமானவர்களை பழிவாங்குகிறார். அதற்கு என்ன வியூகம் அமைத்து செயல் படுகிறார் என்பதே திரைக்கதை,
கதை புதிது, களம் புதிது, சொன்ன விதம் புதுமை!
ஒவ்வொரு சாமானியனும் மாதம் மாதம் சம்பளம் வருவதை நினைத்து சந்தோஷப்பட முடியாமல் வாங்கிய கடன்களுக்கான இஎம்ஐ தொகை செலுத்தத்தான் கஷ்டப்பட்டு வருகின்றனர். என்பதை இந்த படம் அழுத்தமாக பதிவு செய்துள்ளது. அதை மேம்போக்காக சொல்லாமல் இன்றைய இளைஞர்கள் நிச்சயம் யோசிக்கும் வண்ணம் இந்த படம் பார்த்து
திருந்தும் வண்ணம் உளவியல் மூலம் சொல்லி இருக்கிறது
வங்கிகள் திருந்த வேண்டும் வங்கியில் கடன் வாங்க நினைப்பவர்கள் யோசிக்க வேண்டும் ஒருவர் திருந்தினால் கூட படத்திற்கு கிடைத்த வெற்றி நிச்சயம் நிறையவே திருந்துவார்கள் கடனில் வீடு வாங்கி விட்டு சாமானிய மக்கள் படும் அவஸ்த்தைகள் மற்றும் வங்கிகள் சாமானியர்களை நடத்தும் விதம் என அனைத்தையும் இந்த படம் நெத்தியடியாக பேசியுள்ளது.
முதல் பாதியில் என்ன நடக்கிறது என்று கேள்வி எழுகிறது , 2ம் பாதியை பார்த்து விட்டு அழாமல் தியேட்டரை விட்டு வெளியே வரவே முடியாது. அந்தளவுக்கு அப்பா மகள் சென்டிமென்ட் உள்ளது.
நல்ல தரமான படங்களை தயாரித்து வரும் எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் மதியழகன் தயாரித்து உள்ளார்.ஏதோ படம் தயாரிப்பு என்று இல்லாமல் மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை கொண்ட தமிழ் சினிமாவை உருவாக்க வேண்டும் என்ற அவரின் முனைப்பு வெற்றி பெற்றுள்ளது.
தம்பிக்கோட்டை, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ராகேஷ் இயக்கியுள்ளார். அருமையான இயக்கம், தெளிவான திரைக்கதை ,எந்த இடத்திலும் கதையை விட்டு விலகாமல் கொண்டு சென்றிருக்கிறார். இன்றைய கால இளைஞர்களுக்கு என்ன பிடிக்குமோ அதை தெளிவாக சொல்லியிருக்கிறார்
ராமராஜன் படம் என்றால் வெறும் பாட்டு ,நடனம் என்று இல்லாமல் அவரை இந்த காலத்துக்கு மாற்றியிருப்பது இயக்குனர் புத்திசாலித்தனம். வெல்டன் ராகேஷ்.
இப்படத்திற்கு கதாசிரியர் கார்த்திக் குமார் கதை எழுதியுள்ளார். கடன் வாங்கி கஷ்டப்பட்டு வாழ்க்கையில் நொந்த ஒரு மனிதனால் மட்டுமே இப்படி ஒரு கதை களத்தை எழுதி வடிவமைக்க முடியும் இன்று 90% மக்கள் கடன் வாங்கி அவதிப்படுகிறார்கள் ஆடம்பத்திற்காக
இ எம் ஐ யில் வீடு வாங்குவது, கார் வாங்குவது, பின்னர் அவதிப்படுவது, என்று அன்றாட மக்களின் இயல்பான கதை எழுதி இருக்கிறார். கதை ஆசிரியர் பாராட்டலாம்.
கதாநாயகிகளாக நக்ஸா சரண், ராமராஜனின் மகள் திவ்யாவாக வந்து அருமையான நடிப்பை வழங்கி இருக்கிறார் பாசமுள்ள நடிப்பு வாழ்த்துக்கள்.
ஸ்மிருதி வெங்கட், நிறைமாத கர்ப்பினியாக வந்து ராதாரவி இடம் மாட்டிக் கொண்டு அப்பா அப்பா என்று அழைத்து பாசம் காட்டும் அந்த நடிப்பு சாந்தமான முகம் அனைவரையும் கவர்ந்துள்ளது
அபர்ணதி, டிவி சேனல் ரிப்போர்ட் ஆக வருகிறார் ஆரம்பத்தில் இருந்து அவரை முன்னிலைப்படுத்தும் போது அவர்தான் ராமராஜனை கடைசியில் பேட்டி எடுப்பார் என்று படம் பார்ப்பவர்களுக்கு புரிகிறது
ராதாரவி, மனிதநேயம் உள்ள இஸ்லாமியராக வந்து ராமராஜனுக்கு துணை நிற்கிறார் அவரின் அனுபவ நடிப்பு படத்துக்கு கை கொடுக்கிறது உட்கார்ந்த இடத்திலேயே காரியம் சாதிக்கிறார்
எம்.எஸ்.பாஸ்கர், ஆரம்பக் காட்சிகளில் இருந்து கவனம் பெறுகிறார் அவர் அடிக்கும் டைமிங் காமெடிகள் ரசிக்க வைக்கிறது, மகன் மருமகள் நிலை கண்டு அழுது தவிக்கும்போது உருக வைக்கிறார் பாசமுள்ள தந்தை யாக,எம்எஸ் பாஸ்கர் நடிப்பில் என்றும் உச்சம்
லியோ சிவகுமார், ஐடியில் வேலை செய்கிறார் எம் எஸ் பாஸ்கரின் மகனாக வந்து நல்ல ஒரு பொறுப்புள்ள குடும்பத்தலைவனாக இருக்கிறார். தன்னை சுற்றி சதி வலை பின்னப்படுவது அறியாத வெள்ளந்தி யாக வந்து சிக்கலில் மாட்டிக் கொண்டு தவிக்கும் நடிப்பு அருமை!
மைம் கோபி, வி பில்டர்ஸ் என்ற கட்டுமான பணியில் வீடுகளை கட்டி விற்கும் பில்டராக வருகிறார் சாந்தமாக பேசி வாடிக்கையாளர்களை கவரும் நல்ல நடிப்பு ஆனால் அவரை வில்லனாக ஏற்க முடியவில்லை பல கோடிகளுக்கு அதிபதியான அவரின் நடிப்பு நன்றாக இருக்கிறது அவருடைய காஸ்டியூமரில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.
போஸ் வெங்கட், வங்கியில் மேனேஜராக வந்து வங்கி தான் எனக்கு முதல் மனைவி என்று தன் மனைவியிடம் பேசும் போதும் ராமராஜன் மகளின் இந்த நிலைக்கு தானும் ஆளாகி விட்டோம் என்று கடைசியில் அந்த ஐடி கார்டை தூக்கி வீசும் போது போஸ் வெங்கட் உயர்ந்து நிற்கிறார்
வினோதினி , போஸ் வெங்கட் மனைவியாக வந்து எம் எஸ் பாஸ்கரிடம் மாட்டிக் கொண்டு திருதிருவென விழிக்கும் அந்த காட்சிகளும் கணவன் தன் மீது அன்பு காட்டவில்லை என்று பொங்கும் அந்த காட்சிகளில் கவனம் பெறுகிறார் அவரின் காஸ்டியூம் அமைப்பு நன்றாக இருக்கிறது.

மக்கள் நாயகன் ராம் ராஜன் வெற்றியின் பின்னணியில் தூணாக இருந்து அவரது படங்களுக்கு காலத்தால் அழியாத இனிமையான பாடல்களை கொடுத்தவர் இசைஞானி இளையராஜா.
அவர் இந்த படத்திற்கு கிடைத்தது மிகப்பெரிய பலம் பின்னணி இசையில் ராஜா என்றுமே ராஜா தான் என்று சொல்ல வைத்து விட்டார் ராமராஜன் வரும்போது எல்லாம் தீம் மியூசிக் கொடுத்து ராமராஜனுக்கு மீண்டும் கம்பேக் கொடுக்கிறார் உருக்கமான காட்சிகளில் இசை பேசுகிறது. பரபரப்பான காட்சிகளில் இசை பேசுகிறது. ராஜா சார் அமைந்தது இந்த படத்தின் வெற்றிக்கு இன்னும் ஒரு பலம் என்றே சொல்லலாம்
இவர்கள் இருவரும் 23 வருடங்களுக்கு பிறகு ‘சாமானியன்’ படத்தின் மூலம் மீண்டும் கைகோர்த்துள்ளனர். இப்படி ஒரு அபூர்வ கூட்டணியை மீண்டும் இணைத்து படம் இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் இயக்குநர் R.ராகேஷ். ராஜா சாருக்கு இந்த பட குழு எவ்வளவு நன்றி சொன்னாலும் தீராது
நட்புக்காக காவல்துறை அதிகாரியாக இயக்குனர் கே எஸ் ரவிக்குமார், படம் முழுக்க வந்து பரபரப்பாக நடித்திருக்கிறார் அவரின் நடிப்பு நன்றாக இருக்கிறது சிட்டிசன்பட இயக்குனர் நடிப்பு நன்றாக இருக்கிறது டீ கடைக்காரராக வரும் சூப்பர் குட் சுப்பிரமணி, அவ்வப்போது வந்து கலகலப்பு ஏற்படுத்துகிறார் ராஜா ராணி பாண்டியன், கிளைமாக்ஸ் காட்சியில் பரபரப்பை ஊட்டுகிறார் வங்கியில் திருட நினைக்கும் அந்த மூன்று பேர் நடிப்பு நன்றாக உள்ளது இறுதியில் ராமராஜன் உழைத்து வாழ வேண்டும் என்று மக்கள் திலகம் எம்ஜிஆர் பாணியில் அறிவுரை சொல்லிவிட்டு போவது கை தட்டல்
படத்தின் ஒளிப்பதிவு மதுரை ,சென்னை, என்று இரண்டு லொகேஷனிலும் சிறப்பாக இருக்கிறது சென்னையில் உயர்ந்த கட்டிடங்கள் அதன் பின்னணியில் கதை சொல்லும் பாணி மதுரையில் பசுமையான வயல் வரப்புகள் என்று கேமரா புகுந்து விளையாடி உள்ளது
படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது விறுவிறுப்பாக கதையை கொண்டு செல்ல உதவியிருக்கிறது படம் பார்ப்பவர்களை எந்த இடத்திலும் கவனம் விலகாத வண்ணம் எடிட்டரின் கைவண்ணம் படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. மற்றும் அரங்கமைப்பாளர்,
காஸ்ட்யூம் டிசைனர் , டி ஐ ,கலர் கரெக்ஷன், ராமராஜனுக்கு ஒப்பனை செய்தவர்கள், என எல்லோரின் பங்களிப்பு நன்றாக இருக்கிறது. ராமராஜனுக்கு ஆக்சன் காட்சி எப்படி வருமோ அது சரியாக செய்திருக்கிறார் ஸ்டண்ட் மாஸ்டர். பாடல் ஆசிரியர்கள் கவித்துவமிக்க வரிகள் ரசிக்க வைக்கிறது
மொத்தத்தில் இந்த சாமானியன் உங்களை யோசிக்க வைக்கும். கடன் வாங்க நினைப்பவர்களை சிறிது நேரம் சிந்திக்க வைக்கும். பாசமுள்ள தந்தையாக உங்கள் கண்களில் கண்ணீரை வரவழைக்கும்.
வங்கி அதிகாரிகளின் அடாவடிச் செயலை சற்று நிதானமாக்க செயல் படவைக்கும். கையில் பணம் இல்லாமல் வீடு வாங்கி சொகுசாக அனுபவித்து பின் அவஸ்தை படும் மனிதர்களின் வாழ்க்கையை பற்றி பேசியிருக்கும் சாமானியன் இந்தியன், மற்றும் துணிவு, படங்களின் சாயல் இருந்தாலும் அது அவை பேசி இருப்பது வேறு களம் இது பேசி இருப்பது நமது வாழ்க்கை நமது வாழ்வில் நடக்கும் அன்றாடும் மனிதர்களின் உணர்வு பூர்வமான கதை!
சாமானியன் நிச்சயம் உங்களை சிந்திக்க வைப்பான் மக்கள் நாயகன் ராமராஜன் கம் பேக்காக மீண்டும் பல வெற்றிப் பணிகளை கடந்து செல்வார் என்பது நிச்சயம் இப்படத்தின் மக்கள் தொடர்பாளர் ஜான் அவர்கள் எவ்வளவு சிறப்பாக இந்த படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க முடியுமோ அவ்வளவு சிறப்பாக கொண்டு போய் சேர்த்திருக்கிறார் அவருக்கும் நமது வாழ்த்துக்கள்
