பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கிய ‘கொட்டுக்காளி சூரி மற்றும் அன்னா பென் ஆகியோர் நடித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் மாற்றத்தை எதிர் பார்க்கும் அனைவருக்கும் இப்படம் நிச்சயம் பேசப்படும் படமாக இருக்கும்.
எஸ்.வினோத்ராஜின் இரண்டாவது படமான கொட்டுக்காலி , ஒரு எதிர் பார்ப்புடன் படம் தொடங்குகிறது. 6 நிமிட சிங்கிள் டேக்கில், ஒரு நடுத்தர வயதுப் பெண் தன் வீட்டிலிருந்து அருகில் உள்ள கோவிலுக்கு நடந்து சென்று, தன் மகள் மீனா (அன்னா பென்) வீட்டிற்குத் திரும்பிச் செல்கிறார். . பொழுது விடிகிறது: வானத்தில் இளஞ்சிவப்பு நிறத்தை நாம் காண்கிறோம். இது ஒரு சின்ன கிராமம்,
அப்போது ஒரு சேவல் அதை பார்த்து கொண்டு இருக்கும் மீனா ,என காட்சிகள் விரிவடைகிறது. முழு ஆடை அணிந்த பெண் மீனாமீது தண்ணீரை ஊற்றுகிறார்! – ஆனால் அவ்வப்போது ஒளியின் ஒளிரும் அவள் முகத்தில் விழும்போது அவள் ஒருவித துன்பத்தில் இருப்பதை உணர்கிறோம்.
ஒரு இறுக்கமான சூழலில் நாயகி மீனா மௌனமான தீர்க்கமான பார்வையோடு எதையோ வெறித்து பார்த்துக் கொண்டிருக்கிறார் அது என்ன? என்ன நடந்தது என்று ஆவல் படம் பார்ப்பவர்களுக்கு ஏற்படுகிறது.
அன்னா பென் மீனா, சூரி முத்துச்சாமி பாண்டி. இருவரும் ஒருவரையொருவர் நிச்சயிக்கப்பட்டவர்கள், ஆனால் கல்லூரிக்கு செல்லும் பொழுது வேறு ஒரு வாலிபரை விரும்புகிறார் மீனா மேலும் திருமணம் தொடர முடியாதநிலையில். என்ன நடந்தது,
என்பதை மர்மமான முறையில் கொண்டு செல்கிறார் இயக்குனர் .
மீனா மற்றும் பாண்டியின் குடும்பங்கள் இருவரும் ஒரு வழிப்பயணமாக, ஒரு சாமியாரிடம் மீனாவை அழைத்து செல்கிறார்கள் அவளைச் சுற்றியுள்ளவர்கள் கோமாளிகள் போல பேசுகிறார்கள் அது எல்லாம் காதில் விழுந்த பிறகு, அவள் மௌனம் சூழப்பட்ட பயணம் தொடர்கிறாள். ஒரு இறுக்கமான மன நிலையில் .
இரு குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் மோட்டார் சைக்கிள்களை ஓட்டுகிறார்கள், பெண்கள் ரிக்ஷாவின் பயணிக்கிறார்கள்இதுவே ஒரு ஆணாதிக்க சிந்தனை தான்.
உள்ளே மீனா, ஒரு சிறு பையன் மற்றும் ஒரு குணமுள்ள சேவல் ஆகியவற்றை ஒருவர் மீது ஒருவர் குவித்து வைத்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார்கள்.இந்த காட்சிகள் கிராமப்புற மட்டுமல்ல, நம் மனதிலும் உள்ள ஆணாதிக்க நெறிமுறைகளின் நுணுத்தைகாட்டுகிறது.
மீனா யாருடனும் பேச முடியாத அளவுக்கு கோபமாக இருக்கிறார் மீனா ஒரு பாடலை முனு முனுக்கும போது. அதோடு பாண்டியின் கண்ணில் பட்ட ஒரு குட்டி ஈ, சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டை இழக்கச் செய்கிறது,
இதனால் சூரி தன் கட்டுப்பாட்டை இழந்து மீனாவை அடித்து வெளுத்து வாங்குகிறார் சொல்லக்கூடாத வார்த்தை ஒன்றை சொல்லுகிறார் எல்லோருக்கும் அது கலவரத்தை ஏற்படுத்துகிறது எல்லோரையும் சூரிய அடித்து உரைக்கிறார் எல்லோருக்கும் கலக்கம் ஏற்படுகிறது இதில் கூட வந்த ஆட்டோ டிரைவர் சபரிமலைக்கு மாலை போட்டு இருப்பவர் அவரின் மாலை அறுந்து விடுகிறது இதில் ஒரு நுணுக்கத்தை வைத்திருக்கிறார் இயக்குனர் அந்த காட்சிகள் தியேட்டரில் செம கலகலப்பு.

மீண்டும் பயணம் தொடரும் வேளையில்,
ஒரு ராட்சத காளை அவர்களை சாலையில் நிறுத்துகிறது, ,
அந்த ஜல்லிக்கட்டு காளையின் அரசியலை உள்ளே வைத்திருக்கிறார் இயக்குனர் ஒரு சின்ன பெண் வந்து அந்த காளையை அடக்கி கூட்டிப் போகிறார் இத்தனை பேர் இருந்தும் அந்த காலை அருகே நெருங்க முடியவில்லை இந்த காட்சி மிகவும் ரசனை மிகுந்த காட்சி ஆக இருக்கிறது.வெல்டன்
மற்றும் சேவல் ஒரு கட்டத்தில் இறப்பது போல் பாசாங்கு செய்வதன் மூலம் திசைதிருபபத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது
அந்த சேவலுக்கு தண்ணீர் தெளித்து வாயிலிருந்து காற்றை ஊதி தள்ளி அதை நடக்க வைத்து அந்த காட்சி செம ரசனையாக இருக்கிறது உயிர் இனங்கள் பலி கொடுப்பது பற்றி பேசுகிறது இந்த காட்சிகள்
. மீனாவின் வலி தன்னைச் சுற்றியுள்ள உறவுகளை எல்லாம் ஏறிட்டுப் பார்க்கிறார் என்ன தீர்க்கமான பார்வை
மீனா ஒரு காட்சியில் ரிக்ஷாவை விட்டு இறங்க மறுக்கும் போது, உடன் வந்த வர்கள் வாகனத்தை தூக்கி மிருக பலத்துடன் திருப்புகின்றனர். ஒவ்வொரு அலறல் முகத்திலும் கவனம் செலுத்த கேமரா அதன் அருமை யாக காட்டி இருக்கிறார்
ஒளிப்பதிவாளர்
குறிப்பாக இக்குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு, சாதிய ஒடுக்குமுறை குறித்த பயிற்சி கைகொடுக்கிறது
மற்றொரு காட்சியில், ஊர்வலம் மற்றொன்றைக் கடக்கிறது. பெரிய ஆடம்பரம் மற்றும் நிகழ்ச்சியுடன், ஒரு வித்தியாசமான குடும்பம் தெருவில் “பருவமடைதல் விழா” கொண்டாடுகிறது. இந்த நேரத்தில் மீனாவின் கண்களாக மாறிய வினோத்ராஜின் பார்வையில், இது பெண்களின் உடலைப் பண்டமாக்கும் கோரமான காட்சி. ஒரு மனிதன் ஒலிபெருக்கியில், “எனது தாய் மாமா என்ற உரிமை என் மருமகள் பிறந்த நாளிலிருந்து தொடங்கியது” என்று கூறுவது கேட்கப்படுகிறது. உரிமைகள். நிச்சயமாக, அம்மா அல்லது மருமகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. யாரும் கேள்வி கேட்கவில்லை. ரிக்ஷா ஓட்டிச் செல்வதை மீனா அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்
அப்போது மீனாவும் அவரது அம்மாவும் காட்டுக்குள் போகிறார்கள் அங்கு என்ன நடந்தது அம்மா மட்டும் வருகிறார் மீனாவை காணவில்லை சூரி பதறிப் போய் எங்கே அவ என்று கேட்கிறார் அவர் ஓடிப் போய் விட்டாரோ என்ற சந்தேகத்தை அந்த காட்சி ஏற்படுகிறது அதற்கு பிறகு மெதுவாக வருகிறார் மீனா பெண்களின் மீது அவன் நம்பிக்கையையும் சந்தேகத்தையும் சாடும் காட்சியாக இந்த காட்சி பார்க்கப்படுகிறது
மற்றொரு கட்சியில் சூரியின் தங்கை மூன்று நாள் பிரச்சனையில் ஆட்டோ விட்டு இறங்கி காட்டுக்குள் போகிறார் அங்கு சென்று அந்த உபாதைக்கு தீர்வு காண்கிறார் அந்த காட்சியில் இயக்குனர் ஆண்களுக்கு எந்த பிரச்சினையும் கிடையாது பெண்களுக்கு மட்டும் தான் இப்படி பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்லி பெண்ணினத்தின் சோகத்தை வெளிப்படுத்துகிறார்
மீனாவின் அன்னா பென் கதாபாத்திரத்தின் ஒரே வரியான “அவர்கள் என்னை அடிக்கவில்லை” என்ற ஒரே வசனம் கிரெடிட்ஸ் ரோலுக்குப் பிறகு எதிரொலிக்கிறது பாரம்பரியத்தின் பலிபீடத்தில் இடைவிடாத போராட்டத்தை அவள் தொடர்ந்து கவனிக்கும் கண்களால் காண்கிறோம். அவளுடைய உடல் அவளுக்கு சொந்தமாக உணரவில்லை. அவள் ஜன்னலுக்கு வெளியே பார்க்கிறாள், காற்றில் நீண்ட கறுப்பு முடியுடன் ஒரு தனிமையான பெண்ணாக தன்னை கற்பனை செய்துகொள்கிறாள், அவளே விலகிச் செல்கிறாள், அவள் முகத்தில் தெரிந்த புன்னகை. அது கண்டு சூரி கொதிக்க என்ன அருமையான நடிப்பு பேசாமலே மௌனத்தால் நம் இதயங்களை செம்பட்டி ஆள் தாக்கும் அண்ணா பெண் நடிப்பு அற்புதம்
. சூரிக்கு பாண்டி என்ற கதாபாத்திரம் ஒரு கணிக்க முடியாத பாத்திரம்; அவனுடைய இதயம் எப்போது மென்மையாகும், எப்போது அவனுடைய கோபமாக பார்க்கும்
வெறித்து பார்வை
நிச்சயிக்கப்பட்ட பெண் நமக்கு கிடைபாளா? கிடைக்க மாட்டாளா? என்று ஏங்கும் ஏக்கம் தவிப்பு எல்லாம் அவன் அவர் கண்களில் தெரிகிறது.
இயல்பான பெண்ணாக நடித்திருக்கிறார் அன்னா பெண் அதிக வசனம் இல்லை பார்வை, உடல் மொழி மூலம் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அது அவருக்கு புதிதாகவும் சவாலானதாகவும் இருந்திருக்கும்
.
கொட்டுக்காளி… குடும்பம், சாதி, மதம் ஆகிய ஆணாதிக்க அமைப்புகள் காலங்காலமாய் பெண்ணுலகின் மீது நிகழ்த்தும் வன்மம், வக்கிரம், கயமைகளின் பெரும் பயணம்..
இயக்குநர் பிஎஸ் வினோத்ராஜ், இப்படியான படைப்பை தயாரித்த சிவகார்த்திகேயன், நடிகர் சூரி உள்ளிட்ட குழுவினருக்கு கோடி நன்றிகள்”
இதில் வரும் சூரி பாண்டி என்கிற கதாபாத்திரம் எல்லா குடும்பங்களிலும் இருக்கும் ஒருவன் தான். இந்த சமூகம் சொல்லிக்கொடுத்த உறவு முறைகளையும், நம்பிக்கைகளையும் பெரிதும் நம்புகிற ஒரு கதாபாத்திரம் தான் பாண்டி. இந்த படத்தில் வரும் பயணத்தில், இந்த சமூகம் உருவாக்குன பாண்டிக்கும், பாண்டி என்கிற தனிப்பட்ட ஒருவனுக்கும் நடக்குற மன போராட்டத்தை சரியாக பிரதிபலித்தி ருக்கிறார் இயக்குனர்
கொட்டுக்காளி’ என்றால் தென் தமிழ்நாட்டில் பிரச்சனை, தலைவலியைக் கொடுக்கும் நபரைக் குறிப்பதற்கு பயன்படுத்தும் சொல் தமிழ்நாட்டின் கிராமப்புற வாழ்க்கையை மையமாகக் கொண்டு, அதன் சிக்கல்கள், போராட்டங்கள் மற்றும் ஒரு பெண்ணின் மெளனத்தையும், அதற்குப் பின்னால் இருக்கும் கனத்தை மெளனத்தையும் வலிமையுடன் கடத்துகிறது ‘கொட்டுக்காளி’ . தென் தமிழகத்தின் சிக்கலான பிரச்சனைகளையும், மக்களின் மூட நம்பிக்கைகளையும், கடவுள் பக்தியையும் இணைத்து கதையமைத்திருக்கிறார் வினோத்ராஜ் என்பது காட்சிகளின் வழியே புலப்படுகிறது.
கொட்டுக்காளியில் கதைநாயகனாக அவதாரம் எடுத்துள்ள சூரிக்கு ‘விடுதலை’, ‘கருடன்’ திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்று தந்திருக்கிறது. இதையடுத்து சூரியின் ‘கொட்டுக்காளி’ திரைப்படமும் சர்வதேச திரைப்பட விழாக்களில் அங்கீகாரத்தைப் பெற்று ள்ளது
இந்தப் படமும் சூரியின் நடிப்பும், அவர் ஏற்று நடித்துள்ள ‘பாண்டி’ கதாப்பத்திரமும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது
இவருடைய முந்தைய படங்களான விடுதலை, கருடனிலிருந்து முற்றிலும் வேறுப்பட்ட திரைப்படமாக ‘கொட்டுக்காளி’ யில் நடித்திருக்கிறார். ‘பாண்டி’ என்கிற கதாபாத்திரம் எல்லா குடும்பங்ளிலும் இருக்கும் ஒருவன் தான். இந்த சமூகம் சொல்லிக்கொடுத்த உறவு முறைகளையும், நம்பிக்கைகளையும் பெரிதும் நம்புகிற ஒரு கதாபாத்திரம் தான் பாண்டி
சூரி தனது வழக்கமான நகைச்சுவை படங்களில் இருந்து விலகி, இந்த படத்தில் ஒரு ஆழமான, உணர்ச்சிகரமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ‘கும்பளாங்கி நைட்ஸ்’, ‘ஹெலன்’ படங்கள் மூலம் புகழ்பெற்ற அன்னா பென் இந்தப்படத்தில் மீனா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.இருவரும் படத்தை தோளில் சுமந்து வெற்றி படமாக்கி இருக்கிறார் கள்
தமிழ் சினிமாவை புரட்டி போடும் இந்த இயக்குனர் யார்?
பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு மதுரை பூ மார்க்கெட்டில் தினக்கூலியாக வேலை செய்தவர்
அவர் தனது 14வது வயதில் திருப்பூர் நகரின் ஜவுளித் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்தவர்
டுடோரியல் கல்லூரியில் சேர்ந்து ஓரிரு வருடங்கள் படித்தார். கடைசியில், சக ஊழியர்களின் வாழ்க்கையைப் பார்த்து, அந்த இடத்தை விட்டு வெளியேறி சென்னைக்குச் சென்று சினிமாவில் வேலை செய்ய முடிவு செய்தார்
ராகவன் இயக்கிய மற்றும் சற்குணம் தயாரித்த தமிழ் திரைப்படமான மஞ்சப்பை (2013) இல் உதவி இயக்குநராக பணியாற்றினார் . அந்த படத்தில் பணிபுரிந்த பிறகு, அவர் மேலும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஒரு குறும்படம் எடுத்தார் அதன் வெற்றிக்கு பிறகு கூழாங்கல் என்ற படத்தை இயக்கி உலக அளவில் பாராட்டுகளை பெற்று சமுதாயத்தில் கீழ்த்தட்டு மக்களின் ஒன்றோடு ஒன்றாக பழகி அவர்களின் மன உணர்வுகளை புரிந்து கொண்டதால் தான் இப்படிப்பட்ட படைப்புகளை அவரால் உருவாக்க முடிகிறது எனவே கொட்டுக்காலி படத்தின் இயக்குனர் தனது அனுபவங்களை தான் பார்த்த சமூகத்தை தான் பார்த்த சமூகத்தில் பெண்மை எப்படி மதிக்கப்படுகிறது சாதி எப்படி அணுகப்படுகிறது தமிழ்நாட்டில் உள்ள சாமியார்கள் எந்த வகையில் பெண்களை ஏமாற்றுகிறார்கள் ஒரு பெண் காதல் செய்துவிட்டால் அது கூடாது என்று சொல்லும் சமுதாயம் அந்த பெண்ணை எப்படி நடத்துகிறது அந்த பெண்ணுக்கு என்னென்ன கதைகளை கட்டி அந்த பெண்ணை அச்சுறுத்துகிறது என்பதை தன் நுன்னறிவால் சிறப்பாக கதை எழுதி இயக்கி இருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள்.

: ஒளிப்பதிவாளர் சக்திவேல் ஒரு காட்சிக்கு கேமராவால் உயிர் கொடுக்க முடியுமென்றால் அது இவரால் தான் முடியும் ஆட்டோ போகிறது குடத்தை கட்டிக்கொண்டு ஒரு டூவீலர் போகிறது, சேவல் எல்லோரையும் பார்க்கிறது ,ஒரு காலை எல்லோரையும் வெறுத்து பார்க்கிறது கிராமத்தில் உள்ள தார் சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறது இப்படி ஒவ்வொரு காட்சிக்கும் உயிர் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சக்திவேல்
படத்தொகுப்பாளர் கணேஷ் சிவா படத்தை எந்த அளவுக்கு கலகலப்பாக கொண்டு செல்ல வேண்டுமோ என்பதை உணர்ந்து படத்தை தொகுத்திருக்கிறார் கச்சிதமான தொகுப்பு
சவுண்ட் டிசைன் செய்த சுரேன் அழகிய கூத்தன் இருவரும் லைவாக பேசும் வசனங்களை சிறப்பாக பதிவு செய்திருக்கிறார்கள் இப்படத்தில் பாடல்கள் இல்லை அந்த குறையே இல்லாத அளவுக்கு சவுண்ட் டிசைன் மிக்சிங் நன்றாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது
வி .எப் .எக்ஸ், மற்றும் டி ஐ ,கலர் கரெக்ஷன், இணை தயாரிப்பாளர்கள் பானுப்பிரியா, இவர்களுக்கும் வாழ்த்துக்கள். படத்தை மக்களிடம் நல்லபடியாக கொண்டு போய் சேர்த்துள்ள. மக்கள் தொடர்பாளர் திரு. சுரேஷ் சந்திரா , திரு. அப்துல் நாசர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
இப்படத்தை தயாரித்த எஸ் கே ப்ரொடெக்ஷன்ஸ் சிவகார்த்திகேயன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் படத்தின் வருமானம் எவ்வளவு என்று பார்க்காமல் அதன் தரம் தமிழ் சினிமா உயர வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு இப்படத்தை தயாரித்து அர்ப்பணித்து இருக்கிறார். இவர் இதுபோல இன்னும் நிறைய படங்கள் கொடுக்க வேண்டும் என்று வாழ்த்துகிறோம் Cast: Soori, Anna Ben
Writer & Director : PS Vinothraj
DOP: B. Sakthivel
Editor: Ganesh Siva
Sound Design: Suren G, S. Alagia koothan
Production Sound Mixer: Raghav Ramesh
Publicity Design: Kabilan
Marketing & Promotions: Ragul Parasuram
Operations: A R Karthick
Executive Producer: Banu Priya
DI: Promo Works
VFX: Sekar Murugan
Stills & Making: Chegu
PRO: Suresh Chandra – Abdul Nazar
Co-Producer: Kalai Arasu
Producer: Sivakarthikeyan
அனைவருக்கும் கிளாசிக் சினிமா தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது இது போன்ற படைப்புகள் தமிழ் சினிமாவில் உலக சினிமா வாக மாற்றப்படும் ஒரு அற்புதமான படைப்பு அனைவரும் காண வேண்டிய படைப்பு கிளைமாக்ஸ் காட்சியில் சூரி மனமாற்றம் படம் பார்த்தவர்களுக்கு புரியும் சமுதாயத்தில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்லாமல் சொல்லி அடித்த கில்லி அந்த காட்சி ஆக மொத்தத்தில் இந்த கொட்டு காளி உலக சினிமா வாக வந்திருக்கிறது அனைவரும் நிச்சயம் பார்க்கலாம்.
