இயக்குனர் வசந்தபாலன் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர் அவரின் ஒவ்வொரு படைப்புகளும் தமிழ் ரசிகர்கள் கொண்டாடப்பட்டது அவரின் எழுத்தாளுமையும் அவர் ஏழை மக்கள் மீது காட்டும் அக்கறையும் அவரை அங்காடித்தெரு வெயில் படம் மூலம் பலராலும் பேசப்பட்டது அவருக்கு சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருது – 1972 ஆம் ஆண்டு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் பிரிவின் கீழ் வழங்கப்பட்டது அப்படி பட்ட தரமான இயக்குனர் அவரின் இயக்கத்தில் வெளிவந்த அநீதி படத்தின் விமர்சனம் பார்க்கலாம் வாங்க. அர்ஜுன் தாஸ் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகராக மாறியுள்ளார், கைதி படத்தில் அன்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் அவரது குரலுக்காகவே அதிக ரசிகர் பட்டாள்கள் உள்ளது. கைதி, மாஸ்டர் போன்ற படங்களில் வில்லனாகவும், அந்தகாரம் படத்தில் கதையின் நாயகனாகவும் நடித்த அர்ஜுன் தாஸ் அநீதி படத்தின் மூலம் ஒரு முழு நீர ஹீரோவாக அறிமுகம் ஆகி உள்ளார். அவரின் நடிப்பு நன்றாக இருக்கிறத வசந்தபாலனின் படம் என்பதாலும் எதிர்பார்ப்பு பெருகி இருந்தது. ஜிவி பிரகாஷ் இசையமைக்க எம்.கிருஷ்ண குமார், முருகன் ஞானவேல், வரதராஜன் மாணிக்கம், ஜி.வசந்தபாலன் ஆகியோர் தயாரித்து உள்ளனர். அநீதி படத்தில் அர்ஜுன் தாஸ் திருமேனி என்ற கதாபாத்திரத்திலும், துஷாரா விஜயன் சுப்புலட்சுமி என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மேலும் காளி வெங்கட், வனிதா விஜயகுமார், அர்ஜூன் சிதம்பரம், பரணி, சாரா, அறந்தாங்கி நிஷா, சிவா போன்ற பலர் நடித்துள்ளனர்.
படத்தில் கதை என்ன
சென்னையில் ஒரு உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் திரு. அவருக்கு யாரைப் பார்த்தாலும் கொலை செய்ய வேண்டும் என்கின்ற ஒரு மனநோய்யில் அவதிப்பட்டு வருகிறார். அது ஏன் அதற்கு காரணம் என்ன. மனவிரக்தியா. யாரும் எதிர்பாராத சம்பவங்களா. இந்த நிலையில் சுப்புலட்சுமியை பார்த்ததும் அவருக்கு அந்த எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக மறைகிறது. சுப்பு ஒரு பணக்கார வீட்டில் வயதான பாட்டியை பார்த்துக் கொள்ளும் வேலை பார்த்து வருகிறார். அவர்களது மகன் மற்றும் மகள் வெளிநாட்டில் பணிபுரிகின்றனர். எதிர்பாராத விதமாக அந்த பாட்டி இறந்துவிட அதன் பிறகு என்ன ஆனது என்பதே அநீதி படத்தில் கதை. காதல் காட்சிகள் படத்திற்கு மிகவும் ஹைலைட்டாக இருக்கிறது. இயக்குனர் ரசித்து படமாக்கி இருக்கிறார்
வழக்கம்போல வசந்தபாலன் ஒரு எளிய மக்களின் கதையை படமாக எடுத்துள்ளார். எந்தவித சினிமா தனமும் இல்லாத ஒரு எதார்த்தமான திரை கதையின் மூலம் மீண்டும் அசத்தியுள்ளார். அவரின் ஒவ்வொரு வசனமும் ஒவ்வொரு காட்சியும் பாதிக்கப்பட்ட மக்களின் மனசாட்சியாக இருக்கிறது மன்னிப்பு என்பது பணக்காரர்களுக்கு ஈசியாக கிடைத்து விடுகிறது ஏழைகளுக்கு கிடைப்பதில்லை அப்படி எல்லோரையும் மன்னிக்க துவங்கி விட்டாலே. இந்த படத்தில் ஏற்படும் அநீதி யாருக்கும் ஏற்படாது என்பதை தெளிவாக சொல்லியிருக்கிறார் 20 வருடங்களுக்குப் பின் அவருடைய திரைப்படம் வெளிவந்திருக்கிறது இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப கதையை சொல்வதிலும் இளைஞர்களை வரவழைப்பதிலும் புதுமையான யுக்திகளை கையாண்டு உள்ளார் அர்ஜுன் தாஸ் இந்த படத்தில் ஒரு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். ஒரு முழு நீள படத்தை தாங்கி பிடிக்கும் அளவிற்கு ஒரு தேர்ந்த நடிகராக மாறி உள்ளார். எமோஷனல் காட்சிகளிலும் கோபத்தை வெளிப்படுத்தும் விதத்திலும் சிறப்பாகவே நடித்துள்ளார். துஷாரா விஜயன் நம் பக்கத்து வீட்டு பெண் போல் தனது நடிப்பால் உணர்த்துகிறார். இரண்டாம் பாதி முழுக்கவே அழுது கொண்டும், என்ன செய்வது என்று தெரியாமல் திக்கு முக்காடும் அந்த முகபாவனையும் சுப்பு என்ற கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார்
இரண்டாம் பாதியில் சிறிது நேரமே வரும் காளி வெங்கட் கண்கலங்க வைக்கிறார், அவருக்கும் சின்னப் பையனிற்கும் இடையே இருக்கும் அன்பு அனைவரையும் ஈர்க்கிறது. சாரா மற்றும் பரணி தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நன்றாகவே நடித்துள்ளனர். வனிதா விஜயகுமார். காட்சிகள் அவ்வளவு இயல்பாக இருக்கிறது ஒரு பணக்கார கோடீஸ்வரராக திமிர் பிடித்தவராக அற்புதமாக நடித்திருக்கிறார் கடைசியில் அவர் விழும் போது கூட திமிரோடு அர்ஜூன் தாசை மிரட்டுவது மிரட்டல். மற்றும் அர்ஜுன் சிதம்பரம் கதையில் என்ட்ரி ஆன பின்பு திரைக்கதை சூடு பிடிக்கிறது. பணக்காரர்கள் ஏழை மக்களை எவ்வாறு நடத்துகின்றனர் என்பதை வசந்த பாலன் அநீதி படத்தின் மூலம் அழகாக எடுத்துக் கூறியுள்ளார்.
ஜிவி பிரகாஷின் இசையில் பாடல்கள் இனிமை. பின்னனி இசை மிரட்டுகிறார் கதைக்கு தேவையானது போல் இருந்தது. அதிகாரம் கையில் இருந்தால் என்ன வேண்டுமானாலும் பண்ணலாம், மன்னிப்பு கேட்கும் போது மன்னிக்காதவன் மனுசன் இல்ல போன்ற எஸ் கே ஜீவாவின் வசனங்களும் படத்திற்கு கூடுதல் பலம். ஒளிப்பதிவாளர் எட்வின் சாகே மற்றும் எடிட்டர் ரவிக்குமார் இந்த படத்திற்கு கூடுதல் உழைப்பை கொடுத்துள்ளனர். முதல் பாதி முழுக்கவே பெரிதாக எங்கும் போர் அடிக்காமல் சென்றாலும் இடைவேளை ஒரு முக்கியமான இடத்தில் வருகிறது, அது படத்தை முழுவதுமாக பார்க்கத் தூண்டுகிறது. ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சாதாரண மனிதர்கள் என்ன செய்வார்களோ அதனை எந்தவித சினிமா தனமும் இல்லாமல் காட்சிப்படுத்தியது அழகு. இரண்டாம் பாதியில் வரும் அதிகப்படியான சன்டை காட்சிகள் விறுவிறுப்பாக இருக்கிறது. துஷாராவின் ஏழ்மை குடும்ப பின்னணியும் அர்ஜுன் தாசின் ஏழ்மை குடும்ப பின்னணியும் இன்றைய காலகட்டத்தில் ஏழைகள் எது சொன்னாலும் பணக்காரர்கள் காதில் செவிடன் காதில் ஊதிய சங்காகத்தான் இருக்கும் என்பதை காட்டுகிறது ஏழை தவறு செய்து விட்டால் பணக்காரர்கள் மன்னிக்க வேண்டுமே தவிர அவர்களை பழி தீர்க்க எண்ணக்கூடாது அதேபோல காதலன் காதலிக்குள் நல்ல புரிதல் வேண்டும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் காதலில் காதலனை மாட்டி விடக்கூடாது நண்பர்களுக்குள் அதுவும் ஒரே ரூமுக்குள் இருக்கும் மூன்று நண்பர்களுக்குள் புரிதல் இருக்க வேண்டும் உதவும் மனப்பான்மை வேண்டும் அதேபோல உணவு சப்ளை வேலை செய்யும் தொழிலாளர்கள் இன்று எவ்வளவு சிரமப்படுகிறார்கள். என்பதை யும். லிப்ட் வேலை செய்யாமல் 13 மாடி கட்டிடத்தில் நடந்து சென்று உணவு சப்ளை செய்யும் போது அங்கு இருக்கும் ஒரு மயிராண்டி எனக்கு மைனஸ் வேண்டும் என்று அடம் பிடிப்பது எவ்வளவு அடாவடியோ அதே போல அநீதியும் கூட அங்கு நீதியாக மாறுகிறது நேரம் ஆகிவிட்டது நீ கொண்டு வந்த உணவை நான் கேன்சல் செய்கிறேன் என்று ஒரு திமிர் பிடித்தவன் கூறும் பொழுது அங்கு அநீதி நீதியாக மாறுகிறது காவல் நிலையத்தில் உண்மையான குற்றவாளியை தப்புவிக்க போலீஸ் அதிகாரி லஞ்சம் வாங்கிக்கொண்டு நல்லவனை அடித்து துவைக்க அங்கு அநீதி நீதியாக மாறுகிறது உணவு சப்ளை செய்யும் தொழிலாளிகள் கூலி உயர்வு கேட்டு போராடும்போது அதை மறுத்து ஏளனமாக பேசும் அந்த உணவு சப்ளை தொழிலாளரின் முதலாளி யை கொல்வது கூட அநீதி நீதியாகிறது இப்படி எங்கெல்லாம் நீதி மறுக்கப்படுகிறதோ அங்கெல்லாம் மனிதத்தைகாக்க அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தை முன் வடிவாக எடுத்து படத்தை இயக்கி உள்ள இயக்குனர் வசந்த பாலன் தமிழ் சினிமாவுக்கு தவிர்க்க முடியாதவர் அவரின் படைப்புகள் மேலும் மேலும் நல்ல படமாக வர வேண்டும் அவருக்கு வியாபாரத்திலும் வணிகத்திலும் நல்ல வரவேற்பு கிடைக்க வேண்டும் அப்போதுதான் தமிழ் சினிமாவுக்கு நல்ல தரமான படம் கிடைக்கும் கிடைக்கும் மொத்தத்தில் இந்த அநீதி நீதிக்காக வாழும் ஒருவன் அநீதியால் பாதிக்கப்படுகிறான் அவனுடைய கதை தான் இது அநீதி கூட சில நேரங்களில் வெல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்
