நடிகர் & நடிகைகள்
மைக்கேல் தங்கதுரை
கவிப்பிரியா
ஸ்ரீரஞ்சனி
கலைராணி
தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்
தயாரிப்பாளர் ; ஹரிஹரன் பஞ்சலிங்கம்
இயக்குநர் ; அருண்குமார்
ஒளிப்பதிவு ; சூர்யா
இசை ; விவேக் – ஜெஸ்வந்த்
படத்தொகுப்பு ; சசி தக்ஷா
பாடல்கள் ; சினேகன், அன்புச்செழியன்
கலை ; ஜெயசீலன்
ஆடை வடிவமைப்பு ; வெண்மதி
மக்கள் தொடர்பு ; A.ஜான்
ட்ரெண்டிங் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஹரிஹரன் பஞ்சலிங்கம் தயாரித்துள்ள படம் ‘ஆரகன்’. அறிமுக இயக்குநர் அருண்குமார் இயக்கியுள்ள இந்தப்படத்தில் நடிகர் மைக்கேல் தங்கதுரை கதாநாயகனாக நடித்துள்ளார். இலங்கையை பூர்வீகமாக கொண்ட கவிப்பிரியா கதாநாயகியாக நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் ஸ்ரீரஞ்சனி, கலைராணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் விமர்சனம் பார்க்கலாம்
கதை களம்
சரவணன் ,மகிழ் நிலா, இருவரும் காதலர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கும் பொழுது இந்த பொருளாதாரத்தில் திருமணம் செய்ய முடியாது எனவே என்னிடம் ஆறு லட்சம் இருக்கிறது இன்னொரு 4 லட்சம் சேர்ந்தால் சின்னதாக வியாபாரம் ஆரம்பிக்கலாம் நாம் குடும்பம் நடத்துவதற்கு சரியாக இருக்கும் என்று சொல்கிறார் சரவணன் .
காதலி மகிழ்நிலா தனக்கு ஒரு வேலை கிடைத்திருக்கிறது வயதான பெண்மணி யை பார்த்துக் கொள்ளும் வேலை அந்த பணம் வந்தால் நம் குடும்பத்திற்கு மேலும் நன்றாக இருக்கும் என்று
சொல்கிறார் முதலில் வேண்டாம் என்று சொல்லும் சரவணன் பிறகு காதலியை மனமில்லாமல் வேலைக்கு அனுப்புகிறார்
காட்டில் உள்ள மலை பங்களா வுக்கு கிளம்புகிறார் மகிழ் நிலா
அங்கு ஸ்ரீ ரஞ்சனி தனியாக இருக்கிறார் அவரைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு நாயகி மகிழ் நிலாவுக்கு அமைகிறது
ஆரம்பத்தில் எந்த பிரச்சினையும் இல்லாமல் போகும் அந்த வேலை பல மாதங்களுக்கு பிறகு அதிர்ச்சி ஊட்டும் சில சம்பவங்கள் நடக்கிறது
அது என்ன ?அந்த பங்களாவில் இருந்து மகிழ்நிலா தப்பித்தாரா? சரவணன் அவரை கரை சேர்த்தாரா? என்ன நடந்தது என்பதை படம் விறுவிறுப்பாக திகிலுடன் சொல்கிறது.
நாயகன் மைக்கேல் தங்க துரை சரவணனாக எப்படி நடித்திருக்கிறார்?
இந்த படத்தில் நாயகனாக நடித்துள்ள மைக்கேல் தங்கதுரை படத்தில் நாயகனாக நடித்துள்ளார் ஆழ்மனம் பற்றியும் வாழ்நாள் முழுவதும் இளமையாக இருப்பது பற்றியும் காடுகளில் செடி மூலிகைகளை பறித்து உடல் நலம் சரியில்லாத வரை சரி படுத்துவது, என எல்லா காட்சிகளிலும் பிரமிக்க வைத்திருக்கிறார்,
வீட்டில் பாஸிட்டிவான வைப்ரேஷன் இருந்தால் நம் மனமும் பாசிட்டிவ் வாக இருக்கும் என்கிறார் அது உண்மைதான் ஆழ்ம னம் குறித்து அவர் பேசும் வசனங்கள் ஆழ்மனதை பற்றி அறிந்தவர்களுக்கு தெரியும் இது உண்மை என்று!
அவரின் 15 வருட போராட்டத்திற்கு இந்த படம் சரியான ஒரு நடிப்பு தீனி தீனி போட்டு இருக்கிறது. காதலியுடன் ரொமான்ஸ் செய்யும் பொழுதும் மற்றும் தனக்கு தேவையான விஷயங்களை அடைய அவர் காட்டும் அந்த உறுதியான முக அமைப்பு அவரை ரசிக்க வைக்கிறது இனி பல படங்களில் அவரை பார்க்கலாம் இனி அவருக்கு ஏறு முகம் தான்
நாயகி கவிப்பிரியாவுடன் ரொமான்ஸ் காட்சிகளும் மற்றும் இடைவேளைக்கு பிறகு வரும் விறுவிறுப்பான அந்த கதை கட்டத்திலும் அருமையாக நடித்தி ருக்கிறார் ஒரு காட்சியில் குறுகலான ஒரு குகைக்குள் ரொம்பவே சிரமப்பட்டு நடித்திருக்கிறார் அதுமட்டுமல்ல காடுகளில் எடுத்த காட்சிகளில் கூட அர்ப்பணிப்புடன் நடித்திருக்கிறார் இதற்கு முன் இவர் ஊமை செந்நாய் படத்தில் நடித்திருந்தார் பல வருட போராட்டத்திற்கு இந்த படம் நல்ல பலன் கிடைக்கும் என்று சொல்லலாம
நாயகி கவிப்ரியா
இலங்கை கொழும்புவைச் சேர்ந்த கவிப்பிரியா இந்த படத்தில் மகிழ் நிலா” என்ற வேடத்தில் நடித்திருக்கிறார் குடும்பப் பாங்கான முகம் அம்மா, அப்பா, இல்லாத கதாபாத்திரம் ஹாஸ்டலில் தங்கி வேலைக்கு போகும் இவர் சரவணனை நம்பி தன்னை ஒப்படைக்கிறார்
காட்டு பங்களாவுக்கு போன பிறகு இவர் கதாபாத்திரம் முக்கியத்துவம் அடைகிறார் நடிப்பில்
மிரட்டி இருக்கிறார் கவி பிரியாவுக்கு இந்த படம் பேர் சொல்லும் படமாக இருக்கும்
அச்சம் ,நாணம், மிரட்டல், என பல முக பாவங்களில் கலந்து கட்டி கவிப்பிரியா நடித்திருக்கிறார் புதுமுகங்களில்
கவனம் பெறுகிறார்
ஸ்ரீ ரஞ்சனி அசத்தி இருக்கிறாரா
அந்த காட்டு பங்களாவில் ஒரேயொரு பெண்ணாக
தங்கி இருக்கும் ஸ்ரீ ரஞ்சனி நடிப்பு நன்றாக இருக்கிறது இடைவேளை வரை அவர் கதாபாத்திரம் சஸ்பென்சாக கொண்டு சென்று இருக்கிறார் இயக்குனர்.
அவர் பார்க்கும் பார்வையில் ஏதோ ஒரு உள் அர்த்தம் தெரிகிறது
அவர் யார் என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அவர் கதாபாத்திரம் வடிவமைப்பு வந்தி ருக்கிறது
தவழ்ந்து வந்து கதாநாயகியின் முடியை எடுத்து இழுத்து வைத்துக் கொண்டு கடிக்கும் அந்த சீன் அச்சத்தில் உறைய வைக்கும் காட்சி நல்ல தேர்வு
அவர் வரும் ஒவ்வொரு காட்சியும் திகில் ஊட்டும் வண்ணம் இருக்கிறது நல்ல தேர்வு நல்ல நடிப்பு முடிவில் இவர் யார் என்று தெரியும் போது அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!
கலைராணி மிரட்டல் ராணியாக…..
ஆரம்பக் கட்சிகளில் மிக அழுக்கடைந்து ஒரு தனி அறையில் கட்டி வைத்திருக்கும் கலைராணி பயமுறுத்துகிறார் அவர் யார் என்ன நடந்தது என்று தெரிய வரும் பொழுது அதிர்ச்சி அவர் வரும் காட்சிகள் மிரட்டலாக நடித்திருக்கிறார்
அவர் சும்மா பார்த்தாலே பயம் தீ பிடிக்கும் அதுவும் இந்த கதாபாத்திரத்தில் செமையாக மிரட்டி இருக்கிறார் கலைராணி கதாபாத்திரம் யாரும் யூகிக்க முடியாது அந்த அளவுக்கு சிறப்பாக வந்திருக்கிறது
இயக்குனர் அருண் குமார்
இயக்குனர் அருண் காரைக்குடியை சேர்ந்தவர் இவர் குறும்படம் எடுத்து திரைப்படம் இயக்கி உள்ளார் முதல் படத்திலேயே மிரட்டி இருக்கிறார் .
காடுகள் ,மலைகள், நீர்வீழ்ச்சி, என கதை சொன்ன விதம் அச்சத்தை ஏற்படுத்துகிறது
ஆரம்பத்தில் சொல்லும் அந்த இளந்திரையன் காட்சி மிகவும் விறுவிறுப்பான கதை ,
முனிவர் உயிரை காப்பாற்றிய இளந்திரையனுக்கு முனிவர் கொடுத்த வரம் என்ன என்பதை சஸ்பென்சாக கொண்டு சென்றுள்ளார் .
நம் மனம் என்பது ஒரு அற்புதமான சக்தி அதன் மூலம் யாரையும் வீழ்த்தி விடலாம் என்ற ஆழ்மன தத்துவத்தையும் சொல்லி இருக்கிறார்
பலவீனமாக இருக்கும் ஒருவரை ஈசியாக வீழ்த்தி விடலாம் என்ற தத்துவத்தையும் முன்னெடுத்து வைத்திருக்கிறார்
தீமை என்றும் பொய்த்து போகும் நன்மை தான் ஜெயிக்கும் என்பதை திரைக்கதையின் மூலம் அழகாக எடுத்து இருக்கிறார் இயக்குனரின் இயக்கம் பாராட்டத்தக்கது
கிளைமாக்ஸ் காட்சி எதிர்பாராத விருப்பத்தை கொடுத்து ஆச்சரியப்படுத்துகிறார்
ஒளிப்பதிவு, இசை, பாடல்கள், படத்தொகுப்பு, ஆர்ட் டைரக்டர்
சூர்யாவின் ஒளிப்பதிவு அம்சமாக இருக்கிறது. அந்த காடுகள் மலை காட்டு பங்களாவில் ஒற்றை வீடு, நீர்வீழ்ச்சி, என ரசிக்க வைக்கிறது சென்னையை காட்டும் போதும் நவீனப்படுத்தி எடுத்திருக்கிறார் ஒளிப்பதிவுபடத்தின் மிகப்பெரிய பலம் வாழ்த்துக்கள் சார்
இசை விவேக் ஜஸ்வந்த் என இரு வர்
இசையமைத்திருக்கிறார்கள்
பாடல்களும் ரசிக்க வைக்கிறது
கவிஞர் சினேகன் எழுதிய நீதானே பாடல் மெலோடி ரிசிக்க வைக்கிறது பின்னணி இசை மிரட்டி இருக்கிறார்கள் இரட்டையர்கள்
பாடல்களை சினேகன் மற்றும் அன்புச் செழியன் எழுதி இருக்கிறார்கள் ரசிக்க வைக்கிறது
படத்தொகுப்பு சசி தஷா
படத்தின் விறுவிறுப்புக்கு படத்தொகுப்பு கச்சிதமாக செதுக்கி இருக்கிறார் சசி சென்னையில் நடக்கும் காட்சியாகட்டும் கலை ராணியை காட்டும் பொழுதும் காட்டு பங்களாவில் என்ன நடக்கிறது
என்பதை காட்டும் பொழுது குகைக்குள் என் ன இருக்கிறது என்பதை காட்டும் பொழுதும் இடைவேளைக்குப் பிறகு விறுவிறுப்பாக படம் செல்வதற்கு படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது
படத்தின் ஆரம்பத்தில் கலைராணி ஒரு பக்கம் காட்டிவிட்டு சரவணன் மற்றும் மகிழ் நிலாவை ஒரு பக்கம் காட்டும் பொழுது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறார் படத்தொகுப்பாளர்
ஆர்ட் டைரக்டர் ஜெயசீலன் நன்றாக வடிவமைத்து இருக்கிறார் காட்டு பங்களாவின் திகில்
ஊட்டும் ஓவியங்கள்
குகை காட்சிகள்
கலை ராணியின் அந்த பாழடைந்த வீடு, கதாநாயகன் வீடு ,என அரங்க அமைப்பு படத்திற்கு பலமாக இருக்கிறது
தயாரிப்பாளர்கள்
ட்ரெண்டிங் ஆர்ட்ஸ் நிறுவனம் மூலம் ஹரிஹரன், பஞ்சலிங்கம், இருவரும் சேர்ந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறார்கள். இதற்கு முன் வெளிநாட்டில் இரண்டு குறும்படங்களை தயாரித்திருக்கிறார்கள் தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு ஏற்ற கதையாக தயாரிக்க வேண்டும் என்று இயக்குனர் வீடியோ கால் மூலம் தயாரிப்பாளர்கள் கதை கேங ஓகே சொல்லி இருக்கிறார்கள்
வழக்கமான கமர்சியல் கதையாக இல்லாமல் ஆழ்மனம் பற்றியும் வித்தியாசமான முறையில் படத்தை தேர்வு செய்து இருக்கிறார்கள் வாழ்த்துக்கள் சார்
மக்கள் தொடர்பாளர்
இந்த படத்தில் மக்கள் தொடர்பாளர் ஜான் அவர்கள் மக்களிடம் படத்தை சிறந்த பப்ளிசிட்டி மூலம் கொண்டு போய் நன்றாக சேர்த்திருக்கிறார் அவருக்கு நமது வாழ்த்துக்கள்
மொத்தத்தில்ஆரகன் என்றால் கள்ளன், கபடம், ஏமாற்றுபவன் என்று பொருள் இந்த ஆரகன் நிச்சயம் தமிழ் சினிமா ரசிகர்களை ஏமாற்ற மாட்டான்
திகில் பட ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு நிச்சய விருந்தாக அமையும்
உளவியல் ரீதியான கதையை விறுவறுப்போடு தந்த இயக்குனரை பாராட்டி ,ஆரகனை ஆரத் தழுவிக் கொள்ளலாம்
