கிழப்பய விமர்சனம்

:கதிரேச குமார், நடிப்பில் கிழப்பய விமர்சனம்

: கெபி இசையில்

அஜித்குமார் ஒளிப்பதிவில்

ராஜேஷ் படத்தொகுப்பில்

யாழ் குணசேகரன் இயக்கத்தில்
உருவாகி உள்ள கெழப்பய
படத்தின் விமர்சனம் பார்க்கலாம் வாங்க
கதை என்ன

கதையின் நாயகன் கதிரேச குமார், தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக இருந்து வருகிறார். பணிமுடிந்து தனது இரு சக்கர மிதிவண்டியில் வீடு திரும்பும் போது, அவ்வழியாக ஒரு கார் ஒன்று வருகிறது.
அந்த காருக்கு வழிவிடாமல் நடுரோட்டில் போகிறார் காருக்குள் இருப்பவர்கள் அவசரமாக போக வேண்டும் வழி விடுங்கள் என்று கெஞ்சுகிறார்கள்

அது கிராமபுற ரோடு என்பதால் ஒரு வாகனம் மட்டுமே செல்ல முடியும்.
ஆனால் பெரியவர் சைக்கிளை நடுரோட்டில் ஓட்டிக்கொண்டு வழிவிட மறுக்கிறார் இறங்கி அந்த நால்வரும் கெஞ்சுகிறார்கள் அடிக்கிறார்கள் மிரட்டுகிறார்கள் சைக்கிளை தூக்கி வீசி எறிகிறார்கள் ஆனால் அவர் எந்த பதிலும் சொல்லவில்லை அந்த மௌனம் ஏதோ ஒன்றை சொல்ல வருகிறது என்பது மட்டும் புரிகிறது

வழிவிடும்படி தொடர்ந்து ஹார்ன் அடித்துக் கொண்டே இருக்கிறார் அந்த கார் டிரைவர். அங்கு ஒரு வீ ஓ வருகிறார் இரண்டு பேர் வேடிக்கை பார்க்கிறார்கள் என்ன நடக்கப் போகிறது என்று நமக்கும் ஆவலை தூண்டுகிறது திரைக்கதை

ஆனால், கதிரேசகுமார் காருக்கு வழி விடாமல் நடு ரோட்டிலேயே சென்று கொண்டிருக்கிறார் கதிரேச குமார். காரில் வந்தவர்களுக்கு பொறுமை தாங்க முடியாமல் காரை விட்டு இறங்கி கதிரேச குமாரிடம் ஓரமாக செல்லுமாறு கூறுகிறார்.

எதற்கும் செவி சாய்க்காத கதிரேச குமார், நடுவழியிலேயே சென்று கொண்டிருக்கிறார். ஒருகட்டத்தில், காரில் வந்தவர்கள் கதிரேசனை அடிக்கத் தொடங்குகிறார்கள்.

அடிவாங்கிய பிறகும், அந்த காரை பார்த்துக் கொண்டு மீண்டும் நடுரோட்டில் தனது சைக்கிளை போட்டு அங்கேயே அமர்ந்து கொண்டு கார் செல்வதற்கு வழிவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறார்.
படம் பார்ப்பவர்களுக்கு அந்த பெரியவர் மீது ஒரு எரிச்சல் ஏற்படுகிறது எதற்காக இப்படி செய்கிறார் இவர் செய்வது நியாயம் இல்லையே காருக்கு வழி விடுவது தானே நியாயம் என்ற நம் படம் பார்ப்பவர்கள் வெறுப்பையும் சம்பாதிக்கிறார் அந்த நாயகன்

எதற்காக அந்த காரை தடுக்கிறார்.?? அந்த காருக்கும் இவருக்கும் என்ன சம்மந்தம்.? என்பதே படத்தின் மீதிக் கதை
இதை இயக்குனர் சுவையாக சொன்னாரா அல்லது சளி பூட்டும் படி திரைக்கதையில் சொன்னாரா என்பதை இரண்டு மணி நேரக் கதை என்னை கேட்டால் சின்ன பட்ஜெட்டில் எந்த ஒரு அலட்டலும் இல்லாமல் அருமையான தரமான நாட்டுக்கு தேவையான ஒரு நல்ல மெசேஜை கொடுத்து இருக்கிறார் இயக்குனர். என்று தான் சொல்ல வேண்டும்

இப்படத்தின் தயாரிப்பாளரான கதிரேசகுமார், இக்கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இக்கதைக்கு என்ன தேவையோ அதை அளவாக கொடுத்திருக்கிறார்.
அவரின் பார்வையும் அந்த மௌனமும் ஏதோ ஒரு திகிலை கிளப்ப போகிறார் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது இடைவேளை வரை சைக்கிளை நடுரோட்டில் நிறுத்தி வைத்துக்கொண்டு அவர் செய்யும்அழிச்சாட்டம்யம் ஒருவித எதிர்பார்ப்பை உண்டாக்குகிறது அதுவே திரைக்கதைக்கு கிடைத்த வெற்றி

காரில் கர்ப்பிணி இருக்கிறார் ஆனால், இவர் எதற்காக வழி கொடுக்காமல் இருக்கிறார் என்று அவர் மீது நமக்கும் கோபம் வருகிறது. ஆனால், அவ்வளவு அடி வாங்கியும், அந்த காரை விடவில்லையே அப்படியென்றால் ஏதோ ஒரு சங்கதி இருக்கிறது என்று புரிய வைத்து, ஒரு கட்டத்திற்கு மேல் அவர் மீது இரக்கம் ஏற்பட வைத்துவிடுகிறார்
இவரிடம் ஒரு நியாயம் இருக்கிறது அந்த நியாயம் என்ன என்பதை தெரிந்து கொள்ள படம் பார்ப்பவர்கள் ஆவலாய் இருக்கிறார்கள்

படம் முழுவதுமே பேசாமலேயே நகர்த்திச் செல்கிறார். இந்த வயதில் நட்ட நடு காடாக இருக்கும் அந்த இடத்தில், சுள்ளென்று அடிக்கும் வெயிலில் இந்த வயதில் கொஞ்சம் கூட எனர்ஜி குறையாமல் நடித்த கதிரேச குமாருக்கு வாழ்த்துகள்.
இவர் யாரோ என்ன செய்தால் நமக்கு என்ன நம் வீட்டுக்கு எந்த பாதிப்பும் இல்லையே ஒரு பெரிய தவறை நடக்க விட்டிருப்பார் ஆனால் இவரின் நாட்டு சிந்தனை நல்லதொரு கருத்தாகவே அமைந்தது

காரில் வந்த நபர்களும், ஒரு சாமானியன் காரில் வந்து, ஒருவர் வழி விடவில்லை என்றால் எப்படி கோபப்படுவார்களோ, அப்படியாக தங்களது கோபத்தை வெளிக்காட்டும் இடத்தில் இயக்குனரின் இயக்கத்திறமை நன்றாகவே தெரிகிறது. ஊர் விஏஓ’வாக வருபவரும் தனது அனுபவ நடிப்பைக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்.

நடிகர்களின் தேர்வும் நச்சென்று இருக்கிறது. வயதானவர்கள் எதுவும் செய்ய இயலாதவர்கள் என்று எண்ணுபவர்களுக்கு இப்படம் ஒரு படிப்பினையாக கூட அமையலாம். தங்களால் இயன்றதை அவர்களாலும் செய்ய முடியும் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது இந்த கெழப்பய..
ஜெய்லர் படத்தில் சூப்பர் ஸ்டார் செய்ததற்கும் இந்த படத்தில் நாயகன் செய்ததும் ஒரே விஷயம் தான் என்ன அது பட்ஜெட் அதிகம் இது பட்ஜெட் கம்மி அதில் அலட்டல் அதிகம் இதில் கம்மி ஆனால் இதில் கம்பீரம் அதிகம்

முதல் பாதியை விட சுவாரஸ்யம் இரண்டாம் பாதியில் சற்று அதிகமாகவே இருந்தது
. இருந்தாலும், குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இம்மாதிரியான சினிமாக்களை தமிழ் சினிமா சிகப்பு கம்பளம் போட்டு வரவேற்கலாம்.

அஜித்குமாரின் ஒளிப்பதிவு ஒரு சில இடங்களில் பாராட்டும்படியான ஒளிப்பதிவை கொடுத்திருந்தாலும், ஒரு சில இடங்களில் இன்னும் சற்று கூடுதல் கவனத்தை கொடுத்திருந்திருக்கலாம்.

கெபியின் இசையில், படத்தின் பின்னணி இசை யுனிக்’காக இருந்தது பெரும் பலம். எங்கு சைலன்ஸ் தேவையோ அங்கு அதை கச்சிதமாக கொடுத்திருக்கிறார் கெபி.

ராஜேஷின் எடிட்டிங் நறுக்…

ஒரு கதைக்களம் நல்ல மெசேஜ் ஓடு திறக்கதை அமைத்து கொடுக்க வேண்டும் என்று இயக்குனர் முடிவு செய்துவிட்டார் அதற்கான பட்ஜெட்டையும் முடிவு செய்துவிட்டார் அதற்கான இடத்தையும் தேர்வு செய்து விட்டார் நல்ல நடிகரின் தேர்வு செய்துவிட்டார் எல்லோரும் நடிப்பும் இயல்பாக நன்றாக இருந்தது கதிரேச குமார் சிறந்த விருதுக்கான நடிப்பை வழங்கி இருக்கிறார் இது போன்ற தரமான சிறிய பட்ஜெட் படங்களை ஆதரித்து மக்கள் கொண்டாடும் பொழுது தரமான படைப்புகள் வரும் எனவே இந்த கிளப்பய பட்டையை கிளப்புகிறார் முதல் பாதியில் மௌனமாக பயத்தை காட்டுகிறார் இரண்டாம் பாதியில் அதற்கான விளக்கத்தைத் தந்து பெரும் நிம்மதியை தருகிறார் நல்ல படத்தை கொடுத்ததற்காக இந்த படத்தின் இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர்கள் டெக்னீசியன்கள் அனைவரையும் பாராட்டி மகிழ்வோம்